சேலம் ரயில் கொள்ளையர்களுடன் வங்கி அதிகாரிகள் உடந்தையா.. திடீர் பரபரப்பு
ரயிலில் பணம் வரும் தகவலை சொன்னது யார்? என விசாரணை துவங்கி உள்ளது.
Recommended Video

சேலம்: குறிப்பிட்ட அந்த ரயிலில்தான் அவ்வளவு பணம் வருகிறது என்ற தகவல் கொள்ளையர்களுக்கு ஒரு மாசத்துக்கு முன்னடியே தெரியும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கொள்ளையர்களுக்கு தகவல் அளித்த கருப்பு ஆடு யார் என நடவடிக்கை துவங்கி உள்ளது.
சேலம் ரயிலில் ஓட்டை போட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பார்தி இன கொள்ளையர்கள் 7 பேர் பிடிபட்டார்கள். இந்த இனத்தின் குலத்தொழிலே கொள்ளைதானாம்!! இது சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் போலீஸ் காவலில் எடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

செயல்முறை விளக்கம்
10 நாட்களுக்கும் மேலாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த கொள்ளையர்கள் ஒருவழியாக வாயை திறந்து வாக்குமூலம் தர ஆரம்பித்துள்ளனர். அத்துடன் செயல்முறை விளக்கமும் போலீசார் முன்னிலையில் நடத்தி காட்டினர்.

தகவல் வெளியானது
இந்நிலையில், இது சம்பந்தமாக அடுத்த விவரம் வெளியாகி உள்ளது. அதாவது, சேலத்தில் இருந்து ரயில் மூலம் பணம் எடுத்து செல்வது குறித்து, ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்த கொள்ளையர்களுக்கு தகவல் கிடைத்துவிட்டதாம். அதற்கு பிறகுதான் அந்த பணத்தை எப்படி கொள்ளை அடிக்கலாம் என திட்டம் போட்டார்களாம்.

யார் சொன்னது?
இவ்வளவு பெரிய பணத்தொகையும், பணபரிமாற்றமும் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் எல்லாம், சேலம், நாமக்கல் மாவட்ட வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்குதான் தெரியும். மேலும் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தெரியும். இந்த அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்கள், எங்கோ வடமாநில கொள்ளையர்களுக்கு எப்படி தெரிந்தது? யார் சொல்லி இருப்பார்கள்? இதுதான் நம்முடைய சிபிசிஐடி போலீசாரின் அடுத்த கேள்வி.

தீவிர கண்காணிப்பு
இதனால் சேலம், நாமக்கல், சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது பணம் பற்றிய தகவலை அளித்த துருப்புச்சீட்டு யார்? அந்த கருப்பு ஆடு யார் யார் என விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications