சேலம் ரயில் கொள்ளையர்களுடன் வங்கி அதிகாரிகள் உடந்தையா.. திடீர் பரபரப்பு
ரயிலில் பணம் வரும் தகவலை சொன்னது யார்? என விசாரணை துவங்கி உள்ளது.
Recommended Video

சேலம்: குறிப்பிட்ட அந்த ரயிலில்தான் அவ்வளவு பணம் வருகிறது என்ற தகவல் கொள்ளையர்களுக்கு ஒரு மாசத்துக்கு முன்னடியே தெரியும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கொள்ளையர்களுக்கு தகவல் அளித்த கருப்பு ஆடு யார் என நடவடிக்கை துவங்கி உள்ளது.
சேலம் ரயிலில் ஓட்டை போட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பார்தி இன கொள்ளையர்கள் 7 பேர் பிடிபட்டார்கள். இந்த இனத்தின் குலத்தொழிலே கொள்ளைதானாம்!! இது சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் போலீஸ் காவலில் எடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

செயல்முறை விளக்கம்
10 நாட்களுக்கும் மேலாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த கொள்ளையர்கள் ஒருவழியாக வாயை திறந்து வாக்குமூலம் தர ஆரம்பித்துள்ளனர். அத்துடன் செயல்முறை விளக்கமும் போலீசார் முன்னிலையில் நடத்தி காட்டினர்.

தகவல் வெளியானது
இந்நிலையில், இது சம்பந்தமாக அடுத்த விவரம் வெளியாகி உள்ளது. அதாவது, சேலத்தில் இருந்து ரயில் மூலம் பணம் எடுத்து செல்வது குறித்து, ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்த கொள்ளையர்களுக்கு தகவல் கிடைத்துவிட்டதாம். அதற்கு பிறகுதான் அந்த பணத்தை எப்படி கொள்ளை அடிக்கலாம் என திட்டம் போட்டார்களாம்.

யார் சொன்னது?
இவ்வளவு பெரிய பணத்தொகையும், பணபரிமாற்றமும் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் எல்லாம், சேலம், நாமக்கல் மாவட்ட வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்குதான் தெரியும். மேலும் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தெரியும். இந்த அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்கள், எங்கோ வடமாநில கொள்ளையர்களுக்கு எப்படி தெரிந்தது? யார் சொல்லி இருப்பார்கள்? இதுதான் நம்முடைய சிபிசிஐடி போலீசாரின் அடுத்த கேள்வி.

தீவிர கண்காணிப்பு
இதனால் சேலம், நாமக்கல், சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது பணம் பற்றிய தகவலை அளித்த துருப்புச்சீட்டு யார்? அந்த கருப்பு ஆடு யார் யார் என விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications