ஏற்காடு தம்பதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கொலை.. சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
சேலம்: ஏற்காடு தம்பதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் அதே எஸ்டேட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு, செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராரா எஸ்டேட்டில் பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலம் கூட்டி கிராமத்தை சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (41) மற்றும் அவரது மனைவி கதிகேன்ஸ் (36) ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 29-ஆம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்த விசாரணையில் அதே எஸ்டேட்டில் பணியாற்றும் முச்சுராய், சுக்ராம், ராம்நாத் ஆகிய மூவரையும் ஏற்காடு போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
3 பேரிடம் நடத்திய விசாரணையில் பூத்ரானின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, அவருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கதிகேன்ஸ் நாட்டு மருந்த கொடுத்துள்ளார். இதனால் பூத்ராமின் மனைவி இறந்துள்ளார். இதற்காக பழிவாங்குவதற்காகவே இந்த இரு கொலைகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
மேலும் தலைமறைவாக உள்ள ஹைரா போத்ரே மற்றும் பூத்ரான் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தம்பதி கொலை செய்யப்பட்ட அதே எஸ்டேட்டில், தலைமறைவாக இருந்த ஹைரா போத்ரே கழுத்தறுபட்டு, முகம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அருகில் ஒரு கத்தியும் கிடைத்தது. எனவே பூத்ரான்தான் கைரா போத்ரேவை கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்து அவரை தேடி வருகிறார்கள்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications