கொரோனா: சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,164 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் சீனா, இந்தியாவை தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சிங்கப்பூர். இங்கு ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களால்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,098 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றும் கூட சிங்கப்பூரில் 752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் நேற்று 1,164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதும் இதுதான் முதல் முறையாகும். சிங்கப்பூரில் மொத்தம் 5,973 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் சிங்கப்பூரில்தான் அதிக நாட்கள் நிலைத்திருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிங்கப்பூர் தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத் தலைவர் பேராசிரியர் லியோ யீ சின் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் அரசு தீவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Recommended Video
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications