சிங்கப்பூர் நிலவரம் மோசம்- இன்றும் ஒரே நாளில் 632 பேருக்கு கொரோனா -மொத்தம் 5,050 பேருக்கு பாதிப்பு
சிங்கப்பூர்: ஐரோப்பிய நாடுகளைப் போல சிங்கப்பூரிலும் கொரோனா தொற்று படு அதிகமான வேகத்தில் பரவி வருகிறது. சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் 623 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் சிங்கப்பூரில்தான் ஒவ்வொரு நாளும் பல நூறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கு சுமார் 200 பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் நேற்று முன்தினம் 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கன்னியாகுமரி அறிவிப்பு.. களியக்காவிளை எல்லையை மூடியது கேரளா
இதனிடையே சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் 623 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் லாக்டவுன் நடைமுறையில் இருக்கின்றன போதும் வெளிநாட்டினர் தங்கும் இடங்களில்தான் கொரோனா தொற்று சமூகப் பரவலாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது.
சிங்கப்பூரில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆகவும் உள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 5,050 ஆக அதிகரித்த்இருக்கிறது.