இந்தியாவின் மிக முக்கியமான மூவ்.. சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்.. ஒரே கல்லில் பல மாங்காய்
சிங்கப்பூர்: இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தியக் கடற்படைக்குக் கப்பல்கள் இப்போது சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்றுள்ளது. இந்தக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் திடீரென அங்குச் செல்ல என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
உலகிலேயே மிகவும் வலிமையான கடற்படைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. சமீப காலங்களாகத் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியக் கடற்படைக்குக் கப்பல்கள் இப்போது சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்றுள்ளது.

இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் 'தீர்', 'ஷார்தூல்', 'சுஜாதா' ஆகிய கப்பல்களும், இந்தியக் கடலோரக் காவல் படையின் 'சாரதி' கப்பலும் இப்போது சிங்கப்பூர் துறைமுகத்திற்கு விரைந்துள்ளன. அங்கு அவை பல்வேறு பயிற்சி, தொழில்சார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றன. இந்தக் கப்பல்கள் கடந்த ஜனவரி 15ம் தேதி சிங்கப்பூர் சென்றடைந்தன. தென்கிழக்கு ஆசியாவிற்கான தொலைதூரப் பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாகக் கடந்த 3 நாட்களாக அந்தக் கப்பல்கள் அங்கேயே இருந்தன.
தெற்காசிய நாடுகளுக்கு வெளியுறவுக் கொள்கையில் முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்ட் ஈஸ்ட் பாலிசி கீழ் இந்தியா- சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையாக இருக்கும்.
110வது ஒருங்கிணைந்த அதிகாரிகள் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்தப் பயணம், இந்தியா - தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. இன்றைய தினம் சிங்கப்பூரில் இருந்து புறப்படும் இந்தக் கப்பல்கள் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தின் துறைமுகங்களுக்குச் சென்று, அங்கும் பயிற்சியில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், "அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் கடல்சார் ஈடுபாட்டை வலுப்படுத்துவதும் இதன் பிரதான நோக்கமாகும். சுதந்திரமான, அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையே இது காட்டுகிறது" என்றனர்.
இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் நட்பு நாடுகளின் பயிற்சி மாணவர்களுக்குக் கப்பல் ஓட்டுதல், போர்க் கப்பல் கையாளுதல் மற்றும் கடல்சார் செயல்பாடுகள் குறித்த நடைமுறை அனுபவங்கள் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் மாலத்தீவுகள், மியான்மர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆறு சர்வதேச அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications