இந்தியாவின் மிக முக்கியமான மூவ்.. சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்.. ஒரே கல்லில் பல மாங்காய்
சிங்கப்பூர்: இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தியக் கடற்படைக்குக் கப்பல்கள் இப்போது சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்றுள்ளது. இந்தக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் திடீரென அங்குச் செல்ல என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
உலகிலேயே மிகவும் வலிமையான கடற்படைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. சமீப காலங்களாகத் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியக் கடற்படைக்குக் கப்பல்கள் இப்போது சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்றுள்ளது.

இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் 'தீர்', 'ஷார்தூல்', 'சுஜாதா' ஆகிய கப்பல்களும், இந்தியக் கடலோரக் காவல் படையின் 'சாரதி' கப்பலும் இப்போது சிங்கப்பூர் துறைமுகத்திற்கு விரைந்துள்ளன. அங்கு அவை பல்வேறு பயிற்சி, தொழில்சார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றன. இந்தக் கப்பல்கள் கடந்த ஜனவரி 15ம் தேதி சிங்கப்பூர் சென்றடைந்தன. தென்கிழக்கு ஆசியாவிற்கான தொலைதூரப் பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாகக் கடந்த 3 நாட்களாக அந்தக் கப்பல்கள் அங்கேயே இருந்தன.
தெற்காசிய நாடுகளுக்கு வெளியுறவுக் கொள்கையில் முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்ட் ஈஸ்ட் பாலிசி கீழ் இந்தியா- சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையாக இருக்கும்.
110வது ஒருங்கிணைந்த அதிகாரிகள் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்தப் பயணம், இந்தியா - தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. இன்றைய தினம் சிங்கப்பூரில் இருந்து புறப்படும் இந்தக் கப்பல்கள் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தின் துறைமுகங்களுக்குச் சென்று, அங்கும் பயிற்சியில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், "அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் கடல்சார் ஈடுபாட்டை வலுப்படுத்துவதும் இதன் பிரதான நோக்கமாகும். சுதந்திரமான, அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையே இது காட்டுகிறது" என்றனர்.
இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் நட்பு நாடுகளின் பயிற்சி மாணவர்களுக்குக் கப்பல் ஓட்டுதல், போர்க் கப்பல் கையாளுதல் மற்றும் கடல்சார் செயல்பாடுகள் குறித்த நடைமுறை அனுபவங்கள் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் மாலத்தீவுகள், மியான்மர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆறு சர்வதேச அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
-
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்! -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
IND Vs NZ: மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை.. வாய் பேசிய சான்ட்னரை வாயடைக்க வைத்த இந்தியப் படை! -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
இந்த ரெக்கார்டு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா! பல ஆண்டு ரொக்கார்டுகளை சல்லி சல்லியாக உடைத்த SKY படை! -
ரஷ்ய எண்ணெய்யை வாங்க.. அனுமதி கொடுத்த அமெரிக்கா! பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்! -
இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது.. சரியான நேரத்தில் உள்ளே வந்த ரஷ்யா! அமெரிக்காவுக்கு செக்












Click it and Unblock the Notifications