Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கப்பூரில் போலீஸ்காரரை பார்த்து வேண்டுமென்றே இருமிய இந்தியருக்கு 14 வாரம் சிறை!

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போலீஸ்காரரை பார்த்து வேண்டுமென்றே இருமிய இந்தியர் தேவராஜ் தமிழ் செல்வனுக்கு 14 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வசித்து வருபவர் தேவராஜ் தமிழ் செல்வன். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தனது காதலியை தாக்கினார்.

Indian-Origin Singaporean Sent To Jail 14 weeks For Deliberately Coughing At Cop

இதனை தொடர்ந்து புகாரின்பேரில் தேவராஜ் தமிழ் செல்வனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் வாகனத்தில் வைத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றபோது தனக்கு மூச்சுவிட சிரமம் இருப்பதாக அவர் போலீசாரிடம் கூறினார்.

இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தேவராஜ் தமிழ் செல்வன் தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றினார். போலீசார் மற்றும் மருத்துவர்கள் மாஸ்க் அணிய வலியுறுத்தியபோதும், மாஸ்க் அணிய மறுத்த தேவராஜ் தமிழ் செல்வன், ஒரு போலீஸ்காரரை பார்த்து வேண்டுமென்றே இரும்பினார். மேலும், போலீசாரையும், மருத்துவ பணியாளர்களையும் தகாத வார்த்தையால் திட்டினார்.

இது தொடர்பாக தேவராஜ் தமிழ் செல்வன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செங் தியாம், தேவராஜ் தமிழ்செல்வனுக்கு 14 வாரம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+