டாப் ஸ்பீடில் சென்னை.. சிங்கப்பூரிலிருந்து வரும் மாற்றம்! இதை யாரும் எதிர்பார்க்கலையே!
சிங்கப்பூர்: மொத்த உலகமும் தொழில்நுட்ப துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில் சென்னையில் அதிநவீன டேட்டா சென்டர்களை அமைக்க ஏதுவாக சிங்கப்பூர், இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்கள் அமைக்கப்பட உள்ளன.
துபாயைச் சேர்ந்த du நிறுவனம் இந்த பயணியை செய்ய திட்டமிட்டிருக்கிறது. சைப்ரஸைச் சேர்ந்த Datawave Networks நிறுவனத்துடன் இணைந்து, இந்த அதிநவீன கேபிள் அமைப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறக்க du ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்தும் ஒரு மாபெரும் முயற்சியாகும்.

இந்த கடல்சார் ஃபைபர் ஆப்டிக் வலையமைப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (கல்பா), ஓமன் (மஸ்கட்), இந்தியா (மும்பை, சென்னை), மலேசியா (கெடா), மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஆறு முக்கிய இடங்களை இணைக்கும். உலகளாவிய தரவுப் போக்குவரத்திற்கான மாற்று வழிகளை உருவாக்கி, செங்கடல் வழித்தடத்தைச் சார்ந்திருப்பதை குறைப்பதே இத்திட்டத்தின் இலக்கு. 16 ஃபைபர் ஜோடிகள் கொண்ட இக்கம்பி வடம், ஒவ்வொரு ஜோடிக்கும் குறைந்தது வினாடிக்கு 18 டெராபிட்ஸ் தரவு பரிமாற்றத் திறனுடன் செயல்படும்.
இது செயற்கை நுண்ணறிவு, கிளவுட் சேவைகள் மற்றும் ஆசியா, வளைகுடாப் பகுதிகளிலுள்ள மாபெரும் தரவு மையங்களின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஆதரவளிக்கும். தரவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான உலகளாவிய மையமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை இத்திட்டம் வலுப்படுத்துகிறது என 'டூ' நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் செங்கடல் பகுதியில் பல நீர்மூழ்கிக் கம்பி வடங்கள் சேதமடைந்ததால் இத்திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுதி அரேபியாவின் ஜெட்டா அருகே முக்கிய கம்பி வடங்கள் துண்டிக்கப்பட்டு ஆசியா, மேற்கு ஆசியா, இந்தியா முழுவதும் இணையத் தடங்கல்கள் ஏற்பட்டன.
கடந்த மார்ச் மற்றும் 2024ம் ஆண்டு பிப்ரவரியிலும் இதேபோன்ற சம்பவங்கள் இந்திய இணையப் பயனர்கள் மற்றும் வணிகச் சேவைகளைப் பாதித்தன. செங்கடல் வழித்தடத்தைத் தவிர்த்துச் செல்லும் SING கம்பி வடம், இத்தகைய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.
இது இந்திய நிறுவனங்களுக்கும், கிளவுட் சேவை வழங்குநர்களுக்கும் தென்கிழக்கு ஆசிய மற்றும் வளைகுடா சந்தைகளுக்கு, குறைந்த புவிசார் அரசியல் அபாயங்களுடன், பாதுகாப்பான இணைப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications