சிங்கப்பூரில் திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்- 2 வாரங்களில் அதி உச்சமாகுமாம்- மாஸ்க் கட்டாயம்!
சிங்கப்பூர்: உலக நாடுகளை முடக்கிப் போட்ட மனித உயிர்களை கொத்து கொத்தாக காவு வாங்கிய கொரோனா பெருந்தொற்று பேரலை சிங்கப்பூரை மீண்டும் தாக்கி வருகிறது. அடுத்த 2 அல்லது 4 வாரங்களில் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதி உச்சமாகும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2019-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கியது கொரோனே வைரஸ் பாதிப்பு. அன்று முதல் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா பாதிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் 70,10,681 பேர் உயிரிழந்துள்ளனர். 70,47,53,890 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் போடப்பட்டன. உலக நாடுகளுக்கும் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படுவது உறுதியான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் கொரோனா தடுப்பூசிகள் சந்தைகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டும் இருக்கின்றன.
இந்த நிலையில் திடீரென சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் மே 5-ந் தேதி முதல் மே 11-ந் தேதி வரை மொத்தம் 26,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போதைய நிலையில் சிங்கப்பூரில் நாள்தோறும் 200க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனிடையே சிங்கப்பூரில் அடுத்த 2 முதல் 4 வாரங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருந்த போதும் தற்போதைய நிலையில் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனவும் ஓங் யீ காங் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில் பொதுமக்கள் மீண்டும் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications