அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு அதிமுக - பாஜக திருப்புவனத்தில் போராட்டம்
சிவகங்கை: திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 போலீர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு அதிமுக மற்றும் பஜாகவினர் இணைந்து திருப்புவனத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை திருட்டுப் போனது தொடர்பாக, அக்கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்தை (வயது 28) விசாரணைக்காக திருப்புவனம் காவல்நிலையம் அழைத்து சென்றனர். அவரும் தனக்கு எதுவும் தெரியாது என்று காவல்துறையிடம் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று காவல்துறையின் ஸ்பெஷல் டீம் அஜித்தை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறையினர், 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனையும், அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப் பணியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு அதிமுக மற்றும் பஜாகவினர் இணைந்து திருப்புவனத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications