"53 வயசாகியும் இன்னுமா அது தெரியலை".. கண்ணகி மீது கொந்தளித்த கணவன்.. கோடாரியால் ஒரே வெட்டு..!
கோடாரியால் மனைவியை வெட்டிய கணவன் கைதானார்
சிவகங்கை: இப்பதான் அம்மாவை கொன்னுட்டு ஜெயிலுக்கு போனார் பாண்டி.. மறுபடியும் ஜாமீனில் வந்து மனைவியை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போய்விட்டார்.. அந்த அளவுக்கு முரட்டு கோபம் நிறைந்தவர் மிஸ்டர் பாண்டி..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்தான் பாண்டி.. 68 வயதாகிறது.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. இவரது மனைவி இறந்துவிட்டார்.. அதனால், 2வது கல்யாணம் செய்து கொண்டார்.. அவர் பெயர் கண்ணகி.. 53 வயசாகிறது.
21 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.. பாண்டிக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இருக்கிறது.. நிறைய கோபம் வருமாம்.. ஆத்திரம் கண்ணை மறைக்குமாம்.. இப்படித்தான், முதல் மனைவியின் மூக்கையும் காதையும் இவர் அறுத்துவிட்டாராம்.. அந்த கேஸ் இவர் மீது இருக்கிறது.
கொலை
இப்படித்தான் 2019-ல் அவர் அம்மாவுடன் சண்டை போட்டுள்ளார்.. தண்ணி அடிக்க பணம் தராததால், அம்மாவை அடித்தே கொன்றுவிட்டார்.. இவ்வளவு காலம் ஜெயிலில் இருந்தவர், சில மாசத்துக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டுவாசலில் உள்ள அம்மிக்கல்லில் கண்ணகி தேங்காய் சட்னி அரைத்து கொண்டிருந்தார்.
தேங்காய் சட்னி
அதை பார்த்ததும் பாண்டிக்கு டென்ஷன் ஆகிவிட்டது.. "எதுக்கு தேங்காய் சட்னி அரைக்கிறே? உன்னை மீன்குழம்பு தானே வைக்க சொன்னேன்" என்று கேட்டுள்ளார்.. மீன்குழம்பு சரியா வரலை என்று கண்ணகி சொன்னதும், இவ்வளவு வயசாகியும் மீன் குழம்பு வெக்க தெரியலையா? என்று கேட்டு வம்பிழுத்துள்ளார்.. ஒருகட்டத்தில் இவர்களின் சண்டை அதிகமானது.. வாக்குவாதம் நீடித்தது..
மீன் குழம்பு
ஆத்திரம் அடைந்த பாண்டி திடீரென வீட்டிற்குள் ஓடினார்.. அங்கிருந்த கோடாரியை எடுத்து வந்து, கண்ணகியின் தலையில் ஒரே போடாக போட்டார்.. இதில் கண்ணகிக்கு மண்டை உடைந்தது.. ரத்தம் கொட்டியது.. வலியால் அலறி துடிக்கவும், அக்கம்பக்கத்தினர் வைரந்து வந்து, கண்ணகியை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. இந்த தகவல் அறிந்து காரைக்குடி வடக்கு போலீசார் விரைந்து வந்து பாண்டியை கைது செய்துள்ளனர்.. ஆத்திரித்தில் கோடாரியை எடுத்து வெட்டி விட்டேன் என்று வாக்குமூலம் தந்துள்ளார்.
கோடாரி
இப்போது மறுபடியும் ஜெயிலுக்கு போய்விட்டார் பாண்டி.. ஆஸ்பத்திரியில் கண்ணகி சீரியஸாக இருக்கிறாராம்.. தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. மீன்குழம்பு வைக்காத மனைவியை, மீன்குழம்புக்கு பதிலாக தேங்காய் சட்னி அரைத்த மனைவியை, குடிகார கணவன் கொடரியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.