சரக்கடிக்க வந்த சாரைப்பாம்பு..? சிவகங்கையில் சிறப்பான சம்பவம்...!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை அருகே டாஸ்மாக் மதுக்கடைக்குள் புகுந்த பாம்பைக் கண்டு ஊழியர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடித்தனர்.

Recommended Video

    சிவகங்கை: டாஸ்மாக் கடையில் புகுந்த பாம்பு… பீதியில் எஸ்கேப்பான ஊழியர்கள்!

    சிவகங்கை - காரைக்குடி 100 அடி சாலையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இந்த மதுக்கடை இருப்பதால் அங்கு எப்போதும் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதிக் காணப்படும். மேலும் போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வழக்கம்.

    மேலும் மதுக்கடைக்கு அருகிலேயே மதுக் கூடம் இருப்பதால், கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் தங்கள் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு ஆற அமர அங்கு மதுக்குடிப்பது வழக்கம். இதனால் அங்கும் எப்போது கூட்டமாகவே காணப்படும். மதுக்கடையில் கண்காணிப்பாளர் விற்பனையாளர் என மூவர் வேலை செய்கின்றனர்.

    மதுக்கடைக்குள் புகுந்த பாம்பு

    மதுக்கடைக்குள் புகுந்த பாம்பு

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று விடுமுறை தினம் என்பதால் அந்த மதுக்கடையில் வழக்கத்தைவிட மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. டாஸ்மாக் மதுக் கடை ஊழியர்கள் மும்முரமாக விற்பனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று திடீரென மதுக்கடைக்குள் புகுந்தது.

    தலைதெறிக்க ஓடிய ஊழியர்கள்

    தலைதெறிக்க ஓடிய ஊழியர்கள்

    அழையா விருந்தாளியாக கடைக்குள் புகுந்த பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தலைதெறிக்கக் கடையை விட்டு வெளியே ஓடினர். மதுக்கடை மற்றும் மதுக்கூடத்தில் இருந்த மதுப்பிரியர்களும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். இதனால் அந்த இடமே திடீரென பரபரப்பாக மாறியது.

    பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்

    பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்

    இதனையடுத்து மதுக்கடைக்குள் புகுந்த பாம்பு குறித்து சிவகங்கை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் அரை மணி நேர தேடுதலுக்குப் பிறகு மதுபான பெட்டிகளுக்கு இடையே மறைந்த சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    நிம்மதியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள்

    நிம்மதியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள்

    சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டதை அடுத்து அதனை வனத்துறையினரிடம் ஒப்படைப்பதற்காக தீயணைப்புத்துறையினர் கொண்டு சென்றனர். பாம்பு பிடிபட்டதையடுத்து நிம்மதியடைந்த மதுக் கடை ஊழியர்கள் மற்றும் மதுப்பிரியர்கள் மீண்டும் தங்கள் பணியைத் தொடங்கினர். மதுக்கடைக்குள் புகுந்த பாம்பால் சிறிது நேரம் அந்த இடமே பரபரப்பாகக் காணப்பட்டது..

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+