அன்று கருணாநிதி வழங்கிய இலவச தொலைக்காட்சியில்... இன்று ஜோராய் ஒளிபரப்பாகும் கல்வி தொலைக்காட்சி..!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: கொரோனா பரவல் காரணமாக கல்வித் தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கப்படும் நிலையில் அதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்று யூடியூப், ஆன்லைன் , ஸ்கைப் உள்ளிட்ட இன்னும் எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் கூட இன்னும் கருணாநிதி கொடுத்த இவலச வண்ண தொலைக்காட்சி மூலம் கல்வி கற்கும் மாணவர்களும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி ஒருவர், தனது வீட்டில் உள்ள இலவச வண்ண தொலைக்காட்சி மூலம் கல்வி கற்று வருவதை குறிப்பிடலாம்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் மட்டும் ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் யூடியூப், ஸ்கைப் மூலம் தினமும் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை பாடம் எடுத்து வருகிறார்கள். ஆனால் இத்தகைய வசதியும், கல்வி கற்கும் வாய்ப்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிட்டியதா என்றால் முழுமையாக இன்னும் கிட்டவில்லை என்றே கூறலாம்.

கல்வித் தொலைக்காட்சி

கல்வித் தொலைக்காட்சி

இந்நிலையில் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது பள்ளிக்கல்வித்துறை. அவ்வாறு கல்வித் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்களை பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தான் பயில்கின்றனர். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால், கருணாநிதி 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி இன்றும் பல ஏழை எளியோர் வீட்டு பிள்ளைகள் கல்வி கற்பதற்கு உதவி புரிகிறது என்பது தான்.

தேவக்கோட்டை

தேவக்கோட்டை

இதனிடையே இது தொடர்பாக நம்மிடம் பேசிய தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம், கல்வி தொலைக்காட்சியை பார்த்து பாடம் கற்கும் மாணவர்களிடம் தங்கள் ஆசிரியர்கள் காலையும், மாலையும் அலைபேசி மூலம் அழைத்து பாடத்தின் புரிதல் பற்றி பேசுவதாகவும் கூடுதல் விளக்கம் அளிப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

 அரசுப் பள்ளி

அரசுப் பள்ளி

மேலும், கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்படும் நேரங்களில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வீட்டில் அமர்த்தி அதனை கவனிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார். இதனிடையே கல்வித் தொலைக்காட்சி மூடப்படாது என்றும் இன்னும் புதுப்பொலிவுடன் இயக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+