Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறுதிச்சடங்கு.. இந்து மத முறைப்படியா? இஸ்லாத்திலா? மனைவிகள் சண்டை! வித்தியாசமான தீர்ப்பளித்த ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: இஸ்லாம் மதத்தை தழுவி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட தனது கணவரின் உடலை இந்து மத நம்பிக்கையின்படி இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் என்று கூறி முதல் மனைவி தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை வித்தியாசமான தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (55). இவர் 1988 ஆம் ஆண்டு சாந்தி எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால், சாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாலசுப்பிரமணியன் சில ஆண்டுகள் தனியே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

High Court orders cremation of Hindu convert to Islam according to both faiths

இந்நிலையில் பாலசுப்பிரமணியன் கடந்த 2019ம் ஆண்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் விவாகரத்தும் கிடைத்தது. ஆனால், அதனை எதிர்த்து மனைவி சாந்தி மேல்முறையீடு செய்ததால், விவகாரத்து ரத்தானது. இப்படி இருக்கையில் சையத் அலி பாத்திமா எனும் பெண்ணுடன் பாலசுப்பிரமணியன் வாழ்ந்து வந்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு கட்டத்தில் திருமணம் ஆகியுள்ளது. அப்போதுதான் பாலசுப்பிரமணியன், அன்வர் உசேனாக மாறியுள்ளார்.

இந்நிலையில் எனது கணவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் அன்வர் உசேன் உயிரிழந்துவிட்டார். இவரது உடலை இஸ்லாம் மத சடங்குகளின்படி புதைக்க இரண்டாவது மனைவி பாத்திமா முயன்றிருக்கிறார். இதனை எதிர்த்துதான் காவல் நிலையத்தில் புகார் அளித்த முதல் மனைவி சாந்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நான்தான் சட்டப்படி அவருக்கு வாரிசு. எனவே எங்களது மத சடங்குச் படி உடல் அடக்கம் செய்வதற்கு எனது கணவரின் உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். தற்போது உசேனின் உடல் காரைக்குடி அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "அரசு மருத்துவமனையில் உள்ள ஓட்டுநரின் உடலை முதலில் முதல் மனைவியிடம் சாந்தியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் தங்களது மதப்படி சடங்குகளை செய்து அரை மணி நேரத்தில் முடித்துவிட்டு காரைக்குடி முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னர் இரண்டாவது மனைவி இறுதி மரியாதை செய்து இஸ்லாமிய சடங்குகள் படி அடக்கம் செய்யலாம்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.

உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு மத நம்பிக்கைகளின்படி இறுதிச் சடங்கு செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+