கணவரை இழந்து தனிமையில் வசித்த..தலைமை ஆசிரியை வெட்டி படுகொலை.. திடுக்கிட்ட திருப்பத்தூர்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், பெண் தலைமை ஆசிரியர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது தென்மாப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் உயர்நிலை பள்ளியில், ரஞ்சிதம் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் ஏற்கெனவே உயிரிந்து விட்டார். இந்த தம்பதிக்கு அம்பேத்கர் பாரதி என்ற மகனும், அபிமதி என்ற மகளும் உள்ளனர். மகன் அம்பேத்கர், கோயம்புத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வரும் நிலையில், திருமணமான மகள் அபிமதி பட்டுக்கோட்டையில் பணியாற்றி வருகிறார்.

பள்ளிக்கு வரவில்லை
இந்நிலையில், தலைமை ஆசிரியை ரஞ்சிதம் இன்று திடீரென பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, சந்தேகம் அடைந்த சக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் ரஞ்சிதத்தின் வீட்டுக்குச் சென்று பார்க்க முடிவு செய்தனர். இதனையடுத்து, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியை ரஞ்சிதம் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் பிணமாக கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

போலீஸ் விரைந்தனர்
இதனையடுத்து உடனடியாக சக ஆசிரியர்கள் திருப்பத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆசிரியர்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர விசாரணை
இதனைத் தொடர்ந்து மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார், உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீடு முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை பின்னணி
இந்த படுகொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமை ஆசிரியை ரஞ்சிதம், நேற்று இரவு, வீட்டில் தனியாக இருந்ததை சிலர் நோட்டமிட்டு, பின்னர் அவரை படுகொலை செய்திருக்கலாம் என சந்கேகிக்கப்படுகிறது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? ஏதாவது முன்விதோதம் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, கொலை செய்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் தலைமை ஆசிரியர் மர்ம நபர்களால் படுகொலை செய்த சம்பவம், தென்மாப்பட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications