சிவகங்கையும் ராகுல் காந்தியின் பரிசீலனையில் இருந்தது.. ப.சிதம்பரம் பரபர தகவல்
ராகுல்காந்தி சிவகங்கையில் போட்டியிடுவதாக இருந்தது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை: அமேதியைத் தாண்டி ராகுல் காந்தி போட்டியிடும் 2வது தொகுதிக்கான பரிசீலனைப் பட்டியலில் வயநாடு தவிர சிவகங்கை மற்றும் கர்நாடகத்தில் ஒரு தொகுதியும் இடம் பெற்றிருந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரசின் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டும், சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் யார் என்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் அதன் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டார். முன்னதாக இங்கு யாருக்கு சீட் தருவது என்பதில் பெரும் குழப்பமும், பிரச்சினைகளும் நிலவின.

வேட்பாளர் யார்?
ப.சிதம்பத்தின் குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குகள் வரிசையாய் நிற்க, சீட் தருவதில் பல உட்கட்சி தகராறுகள் எழுந்தன. கடைசியில் மகனுக்கு சீட் வாங்க டெல்லிக்கே சென்று தலைமையிடம் பேசி, இறுதியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் என்று அறிவிக்கப்பட்டது.

தி இந்து நாளிதழ்
இப்போது மகனுக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார் ப.சிதம்பரம். இந்நிலையில் மதுரையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழ் பதிப்பை ப.சிதம்பரம் வெளியிட்டார். இந்தப் பின்னணியில், 'தி இந்து' நாளிதழுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார். அதில் சிவகங்கை தொகுதி குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார் ப.சிதம்பரம்.

முதல் வேட்பாளர் பட்டியல்
சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பதில் என்ன சர்ச்சை என்ற கேள்வி முன்னிறுத்தி கேட்கப்பட்டது. அதற்கு ப.சிதம்பரம் பதிலளிக்கும்போது, ''சர்ச்சையெல்லாம் எதுவும் கிடையாது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான 24 மணி நேரத்திலேயே சிவகங்கை தொகுதியின் வேட்பாளர் பெயர் முடிவாகி விட்டது. ஆனால் அதை அறிவிக்க தாமதம் ஏற்பட்டது.

சிவகங்கை தொகுதி
இதற்கு காரணம், அமேதி தவிர இன்னொரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. அந்த 2வது தொகுதிக்கான பரிசீலனைப் பட்டியலில் வயநாடு, சிவகங்கை மற்றும் கர்நாடகாவில் ஒரு தொகுதி ஆகியவை இடம் பெற்றிருந்தன. இந்த 3 தொகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக இருந்தது. அதனால்தான் இந்த தாமதமே தவிர சர்ச்சை எல்லாம் ஒன்னும் இல்லை" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications