Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோழி இறகு தலையில் செருகி.. இரவில் கோயில் கண்மாயில் நடந்த ஹைலைட்.. சிலிர்ப்பூட்டிய சிவகங்கை.. சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படியென்ன முக்கியத்துவம் இந்த திருவிழாவில்?

விநோத திருவிழாக்கள் என்பது இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது.. பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழாக்கள் உள்ளதுபோல, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்களும் உண்டு..

Sivaganga temple festival Mutton Feast and devotees put clay on their body for special darshan sivagangai Amman temple

சித்திரை திருவிழா: குறிப்பாக சித்திரை திருவிழாவின்போது, பல்வேறு கோயில்களில் இதுபோன்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் நடத்தப்படுவதுண்டு.

இதுபோன்ற திருவிழாக்களில், ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படுவது வழக்கமாகும். நள்ளிரவு நேரத்தில் பொங்கல் வைத்து வழிபாடு துவங்குவதுடன், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்படும். பிறகு, விடிய விடிய கறிவிருந்து தயாராகும். காலையில், இந்த கறிவிருந்தினை சுவாமிக்கு படையல் போட்டு, பிறகு, விழாவில் பங்கேற்கும் ஆண்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்படும்.

பொங்கல்: இதுபோலவே, தமிழகத்தில் நடைபெறும் விநோத திருவிழாக்கள் தென்மாவட்டங்களிலும் அதிகம் நடக்கும்.. நேற்றுகூட, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கீழக்குறிச்சிப்பட்டியில் ஒரு விநோத திருவிழா நடந்துள்ளது.. இந்த கிராமத்தில், பொன்னழகி அம்மன் கோயில் ஒன்று பழமையானது.. இந்த கோயிலில் வருடந்தோறும் திருவிழா நடைபெறும்.

Sivaganga temple festival Mutton Feast and devotees put clay on their body for special darshan sivagangai Amman temple

பங்குனி திருவிழாவையொட்டி, கோயிலிலுள்ள பொன்னழகி அம்மனுக்கு ஆடு, சேவல் பலியிட்டு பொங்கல் வைப்பது வழக்கம். அதன்படியே, இப்போதும் பக்தர்கள், ஆடு, சேவல் பலியிட்டு நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள்..

கோழி இறகு: இந்த திருவிழாவில் ஹைலைட்டே சேறு பூசும் நிகழ்வுதான். இந்த கோயிலுக்கு அருகிலேயே கண்மாய் ஒன்று உள்ளது.. இந்த கண்மாயில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேற்றில் புரண்டு உடம்பில் சேற்றை பூசிக் கொள்வார்கள்..

பிறகு, மாலை அணிந்து தலையில் கோழி இறகையும் வைத்துக் கொண்டு, சாமியாடுவார்கள். கண்மாயிலிருந்து கோயில் வரை ஆடிக்கொண்டே வருவார்கள். பிறகு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

பக்தர்கள்: நேற்றைய தினமும் இந்த திருவிழாவில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு உடலில் சேறுபூசி, தலையில் கோழி இறகு வைத்து ஆடினார்கள்..

இதற்கு காரணம், சேற்றினை உடலில் பூசிக்கொள்வதால், உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.. அத்துடன், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்ல, இப்படி கோழி இறகினை தலைல் வைத்து வழிபடுவதால் குடும்ப உறவுகள் தழைக்குமாம்.. நினைத்த காரியங்களும் கைகூடும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

ஆர்வம்: நேற்றைய தினம், சுற்றுவட்டாரத்திலுள்ள கீழக்குறிச்சிபட்டி, செல்லியம்பட்டி, மேட்டாம்பட்டி, தேவன்பட்டி, கருப்புக்குடி, கொள்ளுப்பட்டி, அம்மன்கோவில்பட்டி, வார்பட்டி போன்ற சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+