கரையான் சாப்பிட்ட ரூ.1 லட்சம்..ஓடோடி வந்து ராகவா லாரன்ஸ் தந்த சர்ப்ரைஸ்.. சிவகங்கை பெண்ணுக்கு ஹேப்பி
சிவகங்கை: தகர பெட்டியில் இருந்த ரூ.500, 200, 50, 20 நோட்டுக்கள் அரிக்கப்பட்டு கிடந்தன. ஏழை தம்பதியினர், கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக உண்டியலில் சேமித்த ரூ.1 லட்சத்தையும் கரையான் அரித்துவிட்டன.. இந்த கரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய் நோட்டுக்களுக்கு மாற்றாக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 1லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்த உதவியை தம்பதியினர் எதிர்பார்க்கவேயில்லை.. என்ன நடந்தது சிவகங்கையில்?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிளாதரி ஊராட்சி கக்கினியார்பட்டியை சேர்ந்த தம்பதி குமார் - முத்துக்கருப்பி.. இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.. இந்த கூலி வேலை செய்து தங்களது குழந்தைகளை காப்பாற்றி வரும் நிலையில், மிச்சமுள்ள பணத்தை தகர உண்டியலில் சிறுக சிறுக சேமித்து வந்துள்ளனர்..

கரையான் அரித்த பணம்
ஒரு தகர உண்டியலில் ரூ.500 தாள்களாக ரூ.1 லட்சம் வரை சேமித்து வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்து வைத்திருந்தார்கள்.. 30 வயதான முத்துக்கருப்பி, 2 நாட்களுக்கு முன்பு குழந்தைகள் காதணி விழாவுக்காக உண்டியலை திறந்து பார்த்தபோது, பல 500 ரூபாய் நோட்டுகளை கரையான்கள் அரித்திருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.
சமீபத்தில் பெய்த மழையால் பணம் முழுவதும் நனைந்ததுடன், கரையான் அரித்திருக்கிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக தகர பெட்டியில் சேகரிக்கப்பட்ட பணத்தில், ரூ.500, 200, 50, 20 நோட்டுக்களை கரையான் அரித்துள்ளது.
நம்பிக்கை தந்த வங்கி அதிகாரி
இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித், தாசில்தார் சிவராமனிடம் தெரிவித்து, முன்னோடி வங்கி மூலம் ரிசர்வ் வங்கியிடம் கருணை அடிப்படையில் பணத்தை பெற்றுத்தர முயற்சிக்கு உத்தரவிட்டார்.
அதன்படியே, முத்துக்கருப்பியை வங்கி மேலாளரை அழைத்து சென்றபோது, கிழிந்த ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றி தர வங்கிகளுக்கு அதிகாரம் இருப்பதாகவும், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ரிசர்வ் வங்கிக்கு முறையாக கடிதம் அனுப்பி, அவர்களின் அறிவுரைபடியே செயல்பட முடியும், எனினும், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் உறுதி தந்தனர்.
நெகிழ்ச்சியை தந்த ராகவா லாரன்ஸ்
பணத்தை பெற்றுத் தர வங்கியினரும், உதவி செய்வதாக சொன்னாலும், பிள்ளைகளின் காதணி விழாவை எப்படி நடத்துவது என்று புலம்பிக்கொண்டேயிருந்தார் முத்துக்கருப்பி.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், முத்துக்கருப்பி மற்றும் அவரது குடும்பத்தினரை சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து ரூ. 1லட்சம் வழங்கி உதவினார். இது குறித்த வீடியோவையும் லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார்.. நிதியுதவி செய்த ராகவா லாரன்சுக்கு, முத்துக்கருப்பி நன்றி தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications