தாயுடன் பழகியதால் ஆத்திரம்.. சிவகங்கை மருத்துவமனையில் மருந்தாளுரை குத்திக்கொன்ற இளைஞர்
Recommended Video

சிவகங்கை: சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஓட ஓட விரட்டி மருந்தாளுநரை கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில், தற்காலிக பணியாளராக வேலைபார்த்து வந்தவர் தமிழ்செல்வன். இன்று காலை 10 மணிக்கு இவர் வழக்கம்போல் பணியிலே இருந்தார்.
வெளிநோயாளிகளுக்கு தமிழ்செலவன் மருந்துகளை வழங்கி கொண்டிருந்தார். அங்கு ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக மருந்துகளை வாங்கிச் சென்று கொண்டிருந்தனர்

தாயுடன் பழக எதிர்ப்பு
சிவகங்கை அருகே உள்ள ஒப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர், மருந்தாளுநர் தமிழ்செல்வனிடம் தனது தாயுடன் பழகக்கூடாது என்ற கோணத்தில் பேசிக்கொண்டிருந்தாராம்.

குத்திக்கொலை
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார், கத்தியுடன் விரட்டியுள்ளார். இதனால் மருந்தாளுநர் தமிழ்செல்வன் தப்பி ஓடிஉள்ளார். இருந்தாலும் அருண்குமார் விரட்டி, விரட்டி சென்று தமிழ்செல்வனை 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

மடக்கிய பொதுமக்கள்
இந்த படுகொலையை சிகிச்சைக்காக வந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அருண்குமாரை மடக்கிய பொதுமக்கள், அவரை ஓடவிடாமல் ஒரு அறைக்குள் வைத்து பூட்டினர்.

கொலையாளி கைது
இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், அருண்குமாரை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட தமிழ்செல்வனின் உடலை கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டும் வருகிறார்கள். இந்த படுகொலை சம்பவத்தால் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications