Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்புவனம் அஜித் குமாரை போலீசார் அடித்ததை வீடியோ எடுத்த நபருக்கு ஆபத்து?

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில், முக்கிய திருப்பமாக பார்க்கப்படுவது கோவில் பணியாளரான சக்தீஸ்வரன் செல்போனில் எடுத்த அந்த வீடியோதான். இந்த வீடியோவில் மஃப்டியில் தனிப்படை போலீசார் அஜித் குமாரை பிளாஸ்டிக் பைப், லத்தியால் சரமாரியாக தாக்கியது பதிவாகியிருந்தது. இந்நிலையில் இந்த வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் தனக்கும், தன் தன்னை சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனிப்படை போலீசாரில் ராஜா என்பவர் ரவுடிகளிடம் தொடர்பில் உள்ளவர் என்றும், அவரால் எனக்கும் என்னை சார்ந்தவருக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

high court Tiruppuvanam sivagangai lockup death custodial death case Sivaganga Thiruppuvanam

அஜித் குமார் மரண வழக்கு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் 27 வயது இளைஞர் அஜித் குமாரை போலீசார் அடித்தே கொன்ற சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷித் ராவத் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய மதுரை நீதிமன்றம், நீதிபதி ஜான் சுந்தர்ராஜ் தலைமையில் விசாரித்து, ஜூலை 8 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று ஜான் சுந்தராஜ் விசாரணையானது நேற்று தொடங்கியது. முதல் நாளான விசாரணையானது 11 மணி நேரம் நடந்தது. மதுரை மாவட்ட 4வது கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர்ராஜ், திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகை அறையில் 11 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.

இந்த விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள், கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள், பதிவு செய்யப்பட்ட சிஎஸ் ஆர் உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது கோவிலில் அஜித் குமாரை போலீசார் சரமாரியாக தாக்கியதை, அங்கு கழிவறையில் இருந்தபடி ஊழியர் சக்தீஸ்வரன் எடுத்த வீடியோவும் போட்டு காண்பிக்கப்பட்டது.

திருப்புமுனையை ஏற்படுத்திய வீடியோ

இந்த வீடியோவே இவ்வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதாவது இளைஞர் அஜித் குமாரை நகை திருடியதாக கைது செய்து அழைத்து சென்றிருக்கிறார்கள். அதன்பிறகு மானாமதுரையில் இருந்து போலீசார் வந்து அஜித் குமாரை அழைத்து சென்று கோவிலில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இந்த சமயத்தில் அவர் தாக்கப்பட்ட சத்தம் அப்பகுதியில் கேட்டதாக கூறப்படுகிறது.

அதாவது லத்தி, பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவற்றால் போலீசார் அஜித் குமாரை தாக்கும் போது சத்தம் கேட்டதாகவும், அஜித் குமார் அலறும் சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்களும் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். இந்த சத்தம் கேட்டுத்தான் கோவிலில் கழிவறைக்கு சென்று அங்கிருந்தபடி ஊழியர் சக்தீஸ்வரன் எட்டி பார்த்துள்ளார். அப்போது அஜித் குமார் சரமாரியாக தாக்கப்படுவதை அவர் செல்போனில் வீடியோ எடுத்து இருக்கிறார்.

போலீஸ் டிஜிபிக்கு கடிதம்

எனினும் இதையும் போலீசார் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக பயந்து போய் அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறினார். இந்த நிலையில் தான் இந்த வீடியோவை காண்பித்ததால் எனக்கும் என் குடும்பத்தினருக்கு உயிருக்கு ஆபத்து உள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கோவில் ஊழியர் சக்தீஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

தனக்கும், தன் தன்னை சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். தனிப்படை போலீசாரில் ராஜா என்பவர் ரவுடிகளிடம் தொடர்பில் உள்ளவர் என்றும், அவரால் எனக்கும் என்னை சார்ந்தவருக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+