கரும்பு அரவை இயந்திரத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு.. சிவகங்கை அருகே அதிர்ச்சி சம்பவம்!
சிவகங்கை: சிவகங்கையில் தனியார் சர்க்கரை ஆலை பராமரிப்பு பணியின்போது தவறுதலாக கரும்புப் பாகு தொட்டியில் விழுந்து சிக்கி இரு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரும்புப் பாகு தொட்டியில் சிக்கிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
சிவகங்கை அருகே படமாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில் இன்று ஆலை பராமரிப்பு பணி நடைபெற்றது. கரும்புப் பாகு சேகரிப்பு தொட்டியை கரும்பாவூரைச் சேர்ந்த மோகனசுந்தரம் (35), சிவகங்கை மதுரைச் சாலையை சேர்ந்த பொன்னழகு (59) ஆகியோர் சுத்தம் செய்தனர்.

அப்போது தவறுதலாக 2 தொழிலாளர்களும் பாகு தொட்டியில் விழுந்துள்ளனர். இதில் சிக்கி அவர்கள் பலியாகியுள்ளனர். பலியான மோகனசுந்தரம் (35) மற்றும் பொன்னழகு (59) ஆகியோரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications