சிவகாசி அருகே கோர சம்பவம்! பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண்கள் உட்பட 7 பேர் பலியான சோகம்!
விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று நடந்த எதிர்பாராதவகையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பட்டாசு தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிடங்கள் இடிந்தன, 7 அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
வெடி விபத்தில் சிக்கிய 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அன்றுதான் செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்த 2 நாட்களில் மீண்டும் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டு 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications