எச்ஐவி கிருமி பாதித்த ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது எப்படி?
சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளியின் மனைவி 8 மாத கர்ப்பிணிக்கு எச்ஐவி கிருமி ரத்தம் ஏற்றப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர். அவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது அவர் 2-ஆவது முறையாக கர்ப்பம் தரித்தார். சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

3-ஆம் தேதி
இந்நிலையில் அவருக்கு ரத்த சோகை இருந்ததால் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி கடந்த 3-ஆம் தேதி அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

கண்டுபிடிப்பு
இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவரை மீண்டும் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு எச்ஐவி வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கர்ப்பிணிக்கு
இதையடுத்து அவரது ரத்தத்தை சாத்தூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அங்கும் அவர்கள் எச்ஐவி வைரஸ் இருப்பதை உறுதி செய்தனர். எச்ஐவி வைரஸ் பாதிப்பு உள்ள ரத்தத்தை சோதிக்காமலேயே சாத்தூர் மருத்துவமனை ஊழியர்கள் கர்ப்பிணிக்கு ஏற்றி விட்டது தெரியவந்தது.

எச்ஐவி பாதிப்பு
இதுகுறித்த விசாரணையில் கடந்த 2016-ஆம் ஆண்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்த சாத்தூர் இளைஞர், அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினர் பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் ரத்ததானம் செய்துள்ளார். பின்னர் அவர், வெளிநாடு செல்வதற்காக மதுரைக்கு வந்து மீண்டும் ரத்த பரிசோதனை செய்தபோது, அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அதிர்ச்சி
எனவே தனது ரத்தத்தை உறவினர் பெண்ணுக்கு செலுத்த வேண்டாம் என்று அவர் மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார். அவர் கொடுத்த எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் அவருடைய உறவினர் பெண்ணுக்கு ஏற்றப்படவில்லை என்று தெரிவித்த மருத்துவமனை ஊழியர்கள், அந்த ரத்தம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அலட்சியம்
பின்னர் அந்த ரத்தம் யாருக்கு ஏற்றப்பட்டது என்பதை விசாரிக்கும் போது அது சாத்தூர் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது தெரியவந்தது. ஒருவர் தானமாக கொடுத்த ரத்தத்தை பரிசோதனைக்குட்படுத்தாமலேயே அதை நோயாளியின் உடலில் ஏற்றியது பெரும் அலட்சியம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications