சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் காயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன் பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று சாத்தூரில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில் இன்று சிவகாசி அருகே விபத்து நிகழ்ந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

காக்கிவாடன் பட்டியில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான கேஆர் பட்டாசு ஆலையில் இன்று காலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் ஆலையை நோக்கி விரைந்துள்ளன. பட்டாசுகள் வெடித்து சிதறிக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.

சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று நிகழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்றும் விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆலையில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறி வருவதால் யாரும் அருகில் நெருங்க முடியாத நிலையில் உள்ளதாக தவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்து நிகழ்ந்துள்ள ஆலை அருகே ஏராளமானோர் குவிந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதே ஆலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இரண்டாவது முறையாக இன்றும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று நிகழ்ந்த விபத்தில் ஒரு தொழிலாளி காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications