ஆர்சிபி அணி விற்பனை.. காரணமே விராட் கோலி தான்.. 2022ல் மிஸ்ஸான கனவை பிடிக்க தயாரான அதானி!
பெங்களூர்: ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 18 ஆண்டுகளாக விராட் கோலி காத்திருப்புக்கு ஒரு பலன் கிடைத்ததாக கொண்டாட்டங்கள் அரங்கேறியது. அதற்கேற்ப விராட் கோலியின் மைதானத்திலேயே கண்ணீருடன் நின்ற காட்சி பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரில் நடந்த கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு விசாரணை நடந்து வரும் நிலையில், ஆர்சிபி அணியை விற்பனை செய்ய அந்த அணியின் உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. தற்போது ஆர்சிபி அணியை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது.

ஆர்சிபி ஸ்பான்சர் வருவாய்
பிரிட்டனைச் சேர்ந்த இந்த நிறுவனம் 2016ஆம் ஆண்டு ஆர்சிபி அணியை வாங்கியது. இந்த உரிமையாளருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக விராட் கோலி லண்டனில் செட்டிலாக முடிவு எடுத்தார். அதேபோல் ஆர்சிபி அணிக்கு கிடைக்கும் வருவாயின் முகமாக விராட் கோலி மட்டுமே இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ரூ.150 கோடி ஸ்பான்சர் வருவாயை விராட் கோலி மூலமாக ஆர்சிபி அணி பெற்று வருகிறது.
ஆர்சிபி தொடக்க விலை?
தற்போது விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இன்னும் 2 சீசன்களில் ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகுவார் என்று கூறப்படுகிறது. இதனால் ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு எடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்காக ரூ.17 ஆயிரம் கோடியை ஆரம்ப விலையாக நிர்ணயித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பங்குகள் விற்பனை
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியின் உரிமையாளர்கள் மாற்றம் அடைவது வழக்கமாக நடப்பதுதான். கடந்த சீசனில் கூட குஜராத் அணியின் பெரும்பான்மை பங்குகளை டோரண்ட் நிறுவனம் கைப்பற்றியது. பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளின் பங்குகள் பல்வேறு தரப்பினர் கைகளில் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அதானி ஆர்வம்
அந்த வகையில் ஆர்சிபி அணியின் பங்குகள் விற்பனைக்கு வந்தால், அதனை வாங்குவதற்கு கவுதம் அதானி ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால் அதானி நிறுவனம் ஏற்கனவே டபிள்யூபிஎல், ஐஎல்டி20 ஆகிய லீக்குகளில் அணிகளை வாங்கி இருக்கிறது. 2022ஆம் ஆண்டு குஜராத் அணியை வாங்க அதானி தீவிரமாக இருந்தார்.
ஐபிஎல் தொடர்
அதுமட்டுமல்லாமல் கபடி, கோ-கோ உள்ளிட்ட அணிகளிலும் அதானி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதனால் ஆர்சிபி அணி எவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனைக்கு வந்தாலும், ஐபிஎல் தொடரில் கால் பதிக்க அதானி நிறுவனம் நிச்சயம் மிகப்பெரிய தொகையை செலவு செய்ய முன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications