சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?
சென்னை: சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இணைய அஸ்வின் தீவிரமாக முயற்சித்து வருவதாக ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்கள் மீது அஸ்வின் பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இதன் மூலமாக சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 3 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவர் மீது கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக 8 வீரர்கள் அடைந்த காயம் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியின் மருத்துவக் குழுவுக்கு வீரர்களை பற்றிய புரிதல் இல்லை என்றும் அஸ்வின் விமர்சித்துள்ளார். இதனால் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சனை நியமிக்க விவாதங்கள் நடந்து வருகின்றன. அதேபோல் அஸ்வினும் சில நாட்களுக்கு முன்பாக ஏதோ ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்படுவார் என்று உறுதியாக கூறி இருந்தார். இதனால் சிஎஸ்கே கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்கும் பிஆர் பணிகள் நடந்து வருவதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்படும் பட்சத்தில், அவரால் சிஎஸ்கே நிர்வாகத்திடம் பயிற்சியாளர்கள் குழுவில் மாற்றங்கள் செய்ய சில கோரிக்கைகளை வைக்க முடியும். அஸ்வின் மற்றும் சஞ்சு சாம்சன் இடையில் நீண்ட கால நட்பு இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அஸ்வினை ஒரு ஆலோசகராக சஞ்சு சாம்சன் கருதுகிறார்.
இதனை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். சஞ்சு சாம்சன் விருப்பத்தின் பெயரிலேயே அஸ்வின் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார். ஒருவேளை சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டால், அஸ்வின் சிஎஸ்கே அணியுடன் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக செயல்பட அஸ்வின் தீவிரமாக இருப்பதையும் கடந்த சில நாட்களில் அவரின் நடவடிக்கைகள் மூலமாக புரிந்து கொள்ள முடிவதாக ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications