சூப்பர், சூப்பர், சூப்பர்.. ரிஷப் பண்ட்-ஐ புகழ்ந்து தள்ளிய சுனில் கவாஸ்கர்.. நிஜமான சச்சின் வார்த்தை
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் சதம் விளாசியதை பார்த்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சூப்பர், சூப்பர், சூப்பர்.. என்று பாராட்டி இருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியா மண்ணில் ரிஷப் பண்டின் ஆட்டத்தை பார்த்து ஸ்டுபிட், ஸ்டுபிட், ஸ்டுபிட் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் ஆட்டம் கடுமையான விமர்சனத்தை பெற்றது. ஒரு போட்டியில் ரிஷப் பண்ட் தேவையில்லாத ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்த போது வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர், ஸ்டுபிட், ஸ்டுபிட், ஸ்டுபிட் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். சுனில் கவாஸ்கரின் இந்த விமர்சனம் உலகம் முழுவதும் கவனம் பெற்றது.

ரிஷப் பண்ட் ஆட்டம்
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏனென்றால் களமிறங்கிய 2வது பந்திலேயே பென் ஸ்டோக்ஸ் பந்தை டவுன் தி டிராக் இறங்கி வந்து பவுண்டரிக்கு அனுப்பினார். இதனை பார்த்து பென் ஸ்டோக்ஸே மிரண்டுபோனார்.
அரைசதம் அடித்த பண்ட்
இதன்பின் ரிஷப் பண்ட் நிதானமாக டிஃபென்சிவாக விளையாடி ரன்களை சேர்த்த போது, ஒரு கட்டத்தில் அதிரடிக்கு திரும்பினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ரிஷப் பண்ட் 65 ரன்களை சேர்த்திருந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. எந்தவித பதற்றமும் இல்லாமல் ரிஷப் பண்ட் பவுண்டரிகளாக விளாசி ரன்களை சேர்த்து வந்தார்.
7வது சதம்
அதில் பஷீர் பவுலிங்கில் 4, 6 என்று விளாசி 90 ரன்களுக்குள் வந்தார். அதன்பின் 99 ரன்களை எட்டிய போது, இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு ரன் எடுப்பார் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ரிஷப் பண்ட் அசால்ட்டாக பஷீர் பந்தை சிக்சருக்கு அனுப்பி தனது 7வது சததை விளாசி தள்ளினார். இதன் மூலமாக இங்கிலாந்து மண்ணில் 2வது சதத்தையும் ரிஷப் பண்ட் அடித்திருக்கிறார்.
சுனில் கவாஸ்கர் பாராட்டு
ரிஷப் பண்ட் சதம் விளாசிய போது வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர், சூப்பர்.. சூப்பர்.. சூப்பர் என்று பாராட்டினார். அப்போது சரியாக ரிஷப் பண்ட் பல்டி அடித்து கொண்டாட, ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் நேற்றே சச்சின் டெண்டுல்கர் 3வது சதத்தை எந்த வீரர் அடிக்கப் போகிறார் என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.
சச்சின் வார்த்தை
ஏனென்றால் 2002ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹெடிங்லே மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் நான் ஆகிய மூவரும் சதத்தை விளாசினோம். இதனால் ஜெய்ஸ்வால், கில்லை தொடர்ந்து 3வது சதத்தை யார் அடிக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார். அதற்கேற்ப ரிஷப் பண்ட் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications