Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச்! பாஜகவை எதிர்க்க மத அரசியலை கையில் எடுத்த ஆம் ஆத்மி! சாப்ட் இந்துத்துவா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய அரசியலில், தேசபக்தி மற்றும் மத அடையாளங்கள் வாக்காளர்களை ஈர்ப்பதில் எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி பல ஆண்டுகளாகத் தேசிய அரசியலை முன்னிறுத்துவது, மத தலைவர்களை போற்றுவது, கலாச்சாரப் பெருமையை முன்னிலைப்படுத்துவது, மற்றும் இந்துத்துவத்தை ஊக்குவிப்பது போன்ற கொள்கைகளின் மூலம் தனது பிம்பத்தை வளர்த்துக்கொண்டது.

தற்போது, ஆம் ஆத்மி கட்சியும் அதே திசையில் நகர்வது போல் தெரிகிறது. இது, பாஜகவின் வாக்கு வங்கியில் ஓட்டை போடா ஆம் ஆத்மி முயற்சி செய்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி நேற்று போராட்டம் நடத்தியது. ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் சவுரப் பரத்வாஜ், பஹல்காம் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அரசு அவமதிப்பதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அரசு அல்லது பாஜகவிடமிருந்து உடனடியாக எந்த கருத்தும் வெளியாகவில்லை. இது ஆம் ஆத்மி கட்சியின் இந்துத்துவா அரசியலின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

India Pakistan Asia Cup cricket match AAP Using Patriotism and Soft Hindutva A Move to Attract BJP Voters

ஆம் ஆத்மி கட்சி இந்துத்துவா அரசியல்

இதற்கு முன் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் இலவச மின்சாரம் போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்காக அறியப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, இப்போது தேசபக்தி மற்றும் மதத்தின் மீது தீவிர கவனம் செலுத்துகிறது. பாரதிய ஜனதா கட்சி நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தத் தளத்திற்குள் ஆம் ஆத்மி நுழைய முயற்சிக்கிறது என்று பல அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பல ஆண்டுகளாக, பாஜக தேசியவாதம் மற்றும் இந்துத்துவத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆனால், ஆம் ஆத்மியின் சமீபத்திய நிலைப்பாடுகள் அந்த கட்சியும் இதேபோன்ற முறைகளைப் பயன்படுத்துவதைக் காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளில், ஆம் ஆத்மி தனது அசல் வளர்ச்சி மற்றும் கல்வி அரசியலுக்கு அப்பால் சென்று, தேசபக்தி மற்றும் கலாச்சார உணர்வுகளை தூண்டும் கட்சியாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது.

ஆம் ஆத்மி டெல்லியில் சனாதன சேவா சமிதி

2025 ஜனவரியில், ஆம் ஆத்மி டெல்லியில் சனாதன சேவா சமிதியைத் தொடங்கியது. இந்த சமிதி சனாதன தர்மத்துடன் தொடர்புடைய பூசாரிகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது. அதைத் தொடர்ந்து, கோவில் பூசாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதம் ₹18,000 வழங்கும் "பூசாரி-கிரந்தி சம்மான் யோஜனா" திட்டத்தையும் ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் போது அறிவித்தது.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படையாக மத நிலைப்பாட்டையும் எடுத்துள்ளார். அவர் தன்னை ஒரு "அனுமன் பக்தர்" என்று அடிக்கடி கூறிக்கொள்கிறார், மேலும் முக்கியமான அரசியல் நிகழ்வுகளுக்கு முன்பு கோவில்களுக்குச் செல்கிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, அவர் வால்மீகி மற்றும் அனுமன் கோவில்களுக்குச் சென்றது, இந்து வாக்காளர்களை நேரடியாக ஈர்க்கும் ஒரு நகர்வாகக் காணப்பட்டது.

ஆம் ஆத்மி மத அரசியல்

மதத்தைத் தவிர, ஆம் ஆத்மி தேசபக்தி அடையாளங்களை வலுவாக முன்னிறுத்தியுள்ளது ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில்தான் "தீர்த்த யாத்ரா யோஜனா" திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் கோவில்கள், குருத்வாராக்கள் மற்றும் பிற ஆன்மீகத் தலங்களுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம். இத்திட்டம் முதியவர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது.

அரசியலை தேசபக்தி மற்றும் மத நடவடிக்கைகளுடன் இணைப்பதன் மூலம், ஆம் ஆத்மி ஒரு புதிய அரசியல் பிம்பத்தை உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. இதன் மூலம் ஆம் ஆத்மி ஒரு வளர்ச்சி கட்சி என்று மட்டும் பார்க்கப்பட விரும்பவில்லை, அது மத ரீதியாகவும் செயல்படும் கட்சி என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்

பாஜகவுடன் ஒப்பிடும்போது ஆம் ஆத்மியின் அணுகுமுறை மென்மையானது. பாஜக வெளிப்படையாக இந்துத்துவத்தை முன்னிறுத்தும் அதே வேளையில், ஆம் ஆத்மி மென்மையான இந்துத்துவம் என்ற முறையைப் பயன்படுத்துகிறது - திருவிழாக்களை முன்னிலைப்படுத்துவது, இந்து மத குருமார்களுக்கு ஆதரவு அளிப்பது, மற்றும் மத நம்பிக்கை பற்றிப் பேசுவது ஆம் ஆத்மி மென்மையான இந்துத்துவம் என்ற முறையைப் பயன்படுத்துகிறது.

இதன் மூலம் பாஜகவின் விசுவாசமான வாக்காளர்கள் ஆம் ஆத்மிக்கு மாறுவார்களா, அல்லது இந்த நடவடிக்கைகளை வெறும் imitation ஆகப் பார்ப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆம் ஆத்மி இனி தேசபக்தி மற்றும் இந்துத்துவம் என்ற களத்தை பாஜகவிற்கு மட்டும் விடப்போவதில்லை. நலத்திட்டங்களை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இந்த அரசியல் உத்தி தற்செயலானதல்ல. இந்திய அரசியலில், தேசியவாதம் மற்றும் கலாச்சார அடையாளத்தின் அரசியலுக்கு வாக்காளர்கள் பலர் உணர்வுபூர்வமாக மதிப்பளிக்கிறார்கள். வடஇந்தியாவில் மத அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. மின்சாரம், தண்ணீர் மற்றும் கல்வி பற்றி மட்டும் பேசினால், ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறுவது சிரமம். அதை அந்த கட்சி உணர்ந்து கொண்டதாகவே தெரிகிறது

இந்தியா பாகிஸ்தான் போட்டி

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி நேற்று போராட்டம் நடத்தியது. ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் சவுரப் பரத்வாஜ், பஹல்காம் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அரசு அவமதிப்பதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அரசு அல்லது பாஜகவிடமிருந்து உடனடியாக எந்த கருத்தும் வெளியாகவில்லை. இது ஆம் ஆத்மி கட்சியின் இந்துத்துவா அரசியலின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால், இன்று இந்த போட்டி முடிவுக்கு எதிராக கேள்விகளை எழுப்பினார். பாகிஸ்தானுடன் இப்படி ஒரு போட்டியை ஏற்பாடு செய்ய பிரதமருக்கு என்ன தேவை? இந்த போட்டி நடைபெறக்கூடாது என்று முழு நாடும் கூறுகிறது. அப்படியானால், இந்த போட்டி ஏன் ஏற்பாடு செய்யப்படுகிறது? யாருக்காக.. யாருடைய தேவையை நிறைவேற்ற இந்த போட்டி நடக்கிறது, இது டிரம்ப்பின் அழுத்தத்தினால் செய்யப்படுகிறதா? டிரம்ப்பிற்காக எவ்வளவு குனிவீர்கள்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜகவிற்குப் எதிராக பாஜகவின் அதே அஸ்திரமான இந்து - முஸ்லீம் மோதல், இந்தியா - பாகிஸ்தான் மோதலை தற்போது ஆம் ஆத்மி கையில் எடுத்துள்ளதாகவே தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+