என்னாது விராட் கோலி ஓய்வா.. அந்த வீரரின் ஆதரவாளர்கள் செய்த சதி.. கிங் ரசிகர்கள் சொல்லும் பின்னணி!
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ நிர்வாகிகளிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் இந்த தகவலை ரோஹித் சர்மாவின் நண்பரும் மற்றும் அவரின் பிஆர் குழுவினரால் பரப்பப்பட்டு வருவதாக விராட் கோலியின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ரோஹித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்க பிசிசிஐ நிர்வாகிகள், தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் முடிவு செய்திருந்தனர். இதனை ரோஹித் சர்மாவிடம் ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

ரோஹித் சர்மா சில விளக்கங்களை அளித்த போதும், அவர்கள் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பின்னரே, உடனடியாக இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆக்சிடண்டல் கேப்டனாக வலம் வந்த ரோஹித் சர்மா, அடுத்தடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அடைந்த தோல்விகளே, இந்த முடிவுக்கு காரணமாக அமைந்தது.
ஏனென்றால் பிசிசிஐ உடனான ஈகோ பிரச்சனை காரணமாக விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியை ராஜினாமா செய்து சாதாரணமாக வீரராக விளையாடி வருகிறார். இதனால் ரோஹித் சர்மாவிடம் வேறு வழியின்றி பிசிசிஐ கேப்டன்சியை ஒப்படைத்தது. அவரது தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு கூட இந்திய அணி தகுதி பெறவில்லை.
இந்த நிலையில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த 2 நாட்களில் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகளுடன் விராட் கோலி ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் விராட் கோலிக்கு 36 வயது மட்டுமே ஆகி இருப்பதால், அவர் தாராளமாக 2 ஆண்டுகள் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியும்.
அதற்கான உடற்தகுதி விராட் கோலியிடம் தாராளமாக இருக்கிறது. ஃபார்ம் மட்டுமே பிரச்சனை என்றாலும், விரைவில் அதனை விராட் கோலி எட்டுவார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலியின் ஓய்வு தகவலுக்கு பின்னணியில், ரோஹித் சர்மாவின் ஆதரவாளர்கள் இருப்பதாக அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அதாவது விராட் கோலி கேப்டனாக இருக்கும் போதே, ரோஹித் சர்மாவின் பிஆர் குழுவினர் ஏராளமான விமர்சனங்களை வைத்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவுடன் எப்போதும் வலம் வரும் பிரபல பத்திரிகையாளர் மூலமாக இந்திய அணியின் ஓய்வறை ரகசியங்கள் வெளியாகி வந்தது. இதனால் ரோஹித் சர்மா தான் ஓய்வறை ரகசியங்களை கசியவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பை ஏற்க முடியாமல் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் பிஆர் குழுவினர் விராட் கோலியின் ஓய்வு தொடர்பான தகவல்களை வெளியிடுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியின் பெயர் நிச்சயம் இருக்கும் என்று கிங் கோலியின் ரசிகர்கள் அடித்து கூறுகின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications