பந்துக்கு வலிக்காமல் பவுலிங் செய்த SRH.. நிதிஷ் ரெட்டிக்கு முதல் ஓவர் கொடுத்தால்! பாவம் காவ்யா மாறன்
பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. 202 ரன்கள் என்ற இலக்கை 15.4 ஓவர்களில் ஆர்சிபி அணி சேஸிங் செய்திருக்கிறது. இதனால் ஐதராபாத் அணி பவுலர்கள் பந்துக்கு வலிக்காமல் பவுலிங் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ஆர்சிபி அணி. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி கேப்டன் இஷான் கிஷனின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 80 ரன்களையும், அனிகேட் வர்மா 43 ரன்களையும் எடுத்தனர்.

இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 202 ரன்கள் என்ற இலக்கை 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து எட்டிவிட்டது. சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 61 ரன்களையும், விராட் கோலி 38 பந்துகளில் 69 ரன்களையும் குவித்தனர். கேப்டன் ரஜத் பட்டிதார் 12 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார். இதன் மூலமாக ஆர்சிபி அணி வெற்றிகரமாக ஐபிஎல் தொடரை தொடங்கி இருக்கிறது.
ஆனால் ஐதராபாத் அணியின் பவுலிங் மிக மோசமாக இருந்ததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது. எந்தவொரு ஐபிஎல் அணியும் நிதிஷ் குமார் ரெட்டி முதல் ஓவரை வீச வருவார் என்று கனவிலும் நினைக்காது. பவர் பிளேவில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற திட்டம் இருந்திருந்தால், இஷான் கிஷன் அப்படியொரு மோசமான முடிவை எடுத்திருக்க மாட்டார்.
இது போதாதென்று 5வது ஓவரிலேயே உனாத்கட் அட்டாக்கில் வந்தார். அப்போதே ஐதராபாத் அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது என்று சொல்லலாம். அதேபோல் அனுபவம் இல்லாத ஹர்ஷ் துபேவும், 7வது ஓவரில் ஹர்சல் படேலும் அட்டாக்கில் வந்தனர். இப்படியொரு பவுலிங் லைன் அப்பை வைத்து கொண்டு பெங்களூர் மண்ணில் டிஃபெண்ட் செய்வதெல்லாம் அசாதாரணமான விஷயம்.
இந்தப் போட்டிக்காக காவ்யா மாறன் பெங்களூர் மைதானம் வந்து பார்த்திருப்பது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த சீசனிலும் ஐதராபாத் அணிக்கு தோல்வி உறுதி என்று பேசத் தொடங்கிவிட்டனர். இதனால் பேட் கம்மின்ஸ் விரைவில் ஐதராபாத் அணியில் இணைய வேண்டும் என்றும் ஐதராபாத் அணி ஆதரவாளர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications