இந்திய அணியால் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாது.. பாகிஸ்தானின் முகமது ஆமீர் சொன்ன பாயிண்ட்!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியால் அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேற முடியாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஆமீர் கணித்திருக்கிறார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் மோசமாக இருப்பதை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அறிந்து, அதற்கேற்ப வியூகம் அமைக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றுடன் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைகிறது. ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஒரு குரூப்பாகவும், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு குரூப்பாக பிரிக்கப்பட்டுவிட்டன.

நாளை முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது. இதில் 3 அணிகளுமே தரமான ஃபார்மில் உள்ளன.
இந்திய அணியால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணி விளையாட 4 போட்டிகளிலும் டாப் ஆர்டரில் இஷான் கிஷன் மட்டுமே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளனர். இதனை இந்திய அணி எப்படி சரி செய்யும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகமது ஆமீர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எது என்ற கணிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன்படி முகமது ஆமீர் பேசுகையில், என்னைப் பொறுத்தவரை குரூப் ஏ பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.
இந்திய அணியின் போட்டிகளை கூர்ந்து கவனித்தால், அனைத்து போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருக்கின்றனர். சூப்பர் 8 சுற்றில் அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும். தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை பார்க்கும் போது, எந்த அணியும் வீழ்த்திவிடும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications