இதுக்கு மேலயும் திலக் வர்மா வேணுமா.. 4 இன்னிங்ஸிலும் சொதப்பலோ சொதப்பல்.. ரசிகர்கள் விரக்தி!
அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடைந்துள்ள படுதோல்விக்கு, நட்சத்திர பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இந்திய அணியில் சிவம் துபே மட்டும் பொறுப்புடன் விளையாடி 42 ரன்களை சேர்த்தார். இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி காரணமாக, அடுத்த 2 போட்டிகளும் நாக் அவுட் போட்டிகளாக மாறி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஏனென்றால் நெட் ரன் ரேட் மூலமாக மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணமாக பார்க்கப்படுகிறது. முதலில் அபிஷேக் சர்மாவை காப்பாற்ற இஷான் கிஷனை முதல் பந்தை சந்திக்க வைத்ததே தவறானதாகும்.
இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இஷான் கிஷன் டக் அவுட்டாகினார். தொடர்ந்து வந்த திலக் வர்மாவோ கொஞ்சமும் பொறுப்பின்றி 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து சென்றிருக்கிறார். கடந்த 4 போட்டிகளாகவே திலக் வர்மாவின் ஆட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முதல் 3 இன்னிங்ஸில் தலா 25 ரன்களும், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்களும் சேர்த்திருக்கிறார்.
அத்தனையும் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய ஆட்டம். இன்றைய மிக முக்கியமான போட்டியில் வெறும் 1 ரன்னில் வெளியேறி உள்ளார். அதேபோல் அபிஷேக் சர்மா ஹாட்ரிக் டக் அவுட்டாகியதோடு, இன்றைய ஆட்டத்தில் வெறும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்திருக்கிறார். இதனால் அடுத்த போட்டியில் திலக் வர்மாவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications