ப்ளீஸ்ங்க.. இந்தியா வர பயமா இருக்கு.. இலங்கைக்கு மாற்றுங்க.. ஐசிசியிடம் மீண்டும் கெஞ்சும் வங்கதேசம்
டாக்கா: டி20 உலககோப்பை போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. வங்கதேசம் விளையாடும் லீக் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. ஆனால் இந்தியா வந்து விளையாட மாட்டோம் என்று வங்கதேசம் ஐசிசிக்கு கடிதம் எழுதியது. ஆனால் ஐசிசி அதனை ஏற்கவில்லை. இந்நிலையில் தான் தயவுசெய்து இந்தியாவில் இருந்து போட்டியை மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் 2வது முறையாக ஐசிசிக்கு கடிதம் எழுதி உள்ளது.
ஆண்களுக்கான உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7 ம் தேதி தொடங்கி மார்ச் 8 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை நம் நாடும், இலங்கையும் சேர்ந்து நடத்துகிறது. வங்கதேசத்துக்கு நம் நாட்டில் மொத்தம் 4 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

கொல்கத்தாவில் பிப்ரவரி 7 ம் தேதி மேற்கு இந்திய தீவுகள் அணி, பிப்ரவரி 9ல் இத்தாலி, பிப்ரவரி 14ல் இங்கிலாந்து பிறகு பிப்ரவரி 17 ல் மும்பையில் நேபாள அணியை வங்கதேசம் எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில் தான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மாட்டோம். எங்களுக்கான அனைத்து போட்டியையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் 4 நாட்களுக்கு முன்பு ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டது.
அதில், ‛‛தற்போதைய சூலில் இந்தியாவில் வங்கதேச அணியினரின் பாதுகாப்பு தொடர்பான கவலை அதிகரித்துள்ளது. இதனால் வங்கதேச அரசின் ஆலோசனை கருத்தில் கொண்டு எங்கள் அணி இந்தியாவுக்கு பயணம் செய்யாது. போட்டியை இலங்கைக்கு மாற்ற வேண்டும்'' என்று கூறியது.
இதற்கு ஐசிசி இன்னும் கிரீன் சிக்னல் அளிக்கவில்லை. அதேபோல் போட்டியை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற மாட்டோம் என்றும் கூறவில்லை. மாறாக வீரர்களின் பாதுகாப்பு தொடர்பான எந்த மாதிரியான பிரச்சனைகள் உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி ஐசிசி சார்பில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கேட்கப்பட்டது.
இதையடுத்து இந்தியாவுக்கு ஏன் வந்து விளையாட முடியாது? என்பது தொடர்பாக விரிவாக ஐசிசிக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் 2வது முறையாக கடிதம் எழுதி உள்ளது. இந்த கடிதத்தில் வீரர்களின் பாதுகாப்பு குறித்து விரிவான தகவல்களை அனுப்பி உள்ளது. அதோடு இந்தியாவுக்கு பதில் வங்கதேச போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், ‛‛எங்களின் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர் ஆசிப் நஸ்ரூடன் நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம். அதன்பிறகு 2வது முறையாக ஐசிசிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தயாவில் பாதுகாப்பு சம்பந்தமாக உள்ள கவலைக்குரிய பகுதிகளை ஐசிசி அறிந்து கொள்ள விரும்பியது. அதனை சுட்டிக்காட்டியுள்ளோம்'' என்றார். இருப்பினும் அவர் கடிதத்தில் இருக்கும் சாராம்சம் பற்றி விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக ங்கதேசத்தில் தற்போது நம் நாட்டுக்கு எதிரான அவதூறு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. உள்நாட்டு வன்முறையில் வங்கதேசம் சிக்கி தவித்து வருகிறது. இந்த வன்முறையில் இந்துக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால் வங்கதேசத்துக்கு எதிராக நம் நாட்டில் ஆங்காங்கே போராட்டம் வெடித்தது.
மேலும் சமீபத்திய ஐபிஎல் மினி ஏலத்தில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை கேகேஆர் அணி ரூ.9.20 கோடிக்கு ஏலம் எடுத்து இருந்தது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பிசிசியை உத்தரவின்படி முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் போட்டியில் கேகேஆர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கத்தால் கோபமடைந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பாதுகாப்பு என்று கூறி நம் நாட்டில் விளையாட மறுத்து வருகிறது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications