Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்ரா சக்க.. வைபவ் சூர்யவன்ஷியை அதுவரை பெரிய வீரராக ஏற்க மாட்டேன்.. தரமான இலக்கை நிர்ணயித்த தந்தை!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடும் வரை வைபவ் சூர்யவன்ஷியை தாம் ஒரு பெரிய கிரிக்கெட் வீரராக ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்று அவரின் தந்தை சஞ்சீவ் கூறியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைக்கும் வெற்றி வெறும் தொடக்கம் என்று மட்டுமே கூறிய அவரின் தந்தை, யு19 உலகக்கோப்பை வெற்றியின் கண்ணீரை அடக்க முடியவில்லை என்றும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக ஆடிய 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்.

Vaibhav Suryavanshi

வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம்

வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் ஜாம்பவான் வீரர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து களத்தில் நின்று கொண்டிருந்தார். ஆனால் 32 பந்துகளில் அரைசதம், 55 பந்துகளில் சதத்தை எட்டி ஆச்சரியம் கொடுத்தார்.

நெகிழ்ச்சியில் தந்தை

இதனால் வைபவ் சூர்யவன்ஷியை இந்த தலைமுறைக்கான வீரர் என்ற ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷியின் வெற்றி குறித்து அவரின் தந்தை சஞ்சீவ் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகிறது. அதில் சஞ்சீவ் பேசுகையில், யு19 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் என் மகன் செல்ஃபோனில் அழைத்த போது, என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

வெறும் தொடக்கம்

சக வீரர்களுடன் கொண்டாட்டத்தில் இருந்தார். அதனால் உடனடியாக நான் உன்னிடம் பின்னர் பேசுகிறேன்.. இது உனக்கான தருணம்.. இதன்பின் மீண்டும் யு19 அணியில் விளையாட முடியுமா என்று தெரியவில்லை.. இந்த தருணத்தை கொண்டாடிக் கொள் என்று கூறிவிட்டேன். என்னை பொறுத்தவரை வைபவ் சூர்யவன்ஷியின் சாதனைக்கு இதுவொரு தொடக்கம் மட்டும்தான்.

அடுத்த இலக்கு என்ன?

அவர் சாதிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் ஏராளமானவை உள்ளது. அதேபோல் வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வரையிலும், அவரை பெரிய கிரிக்கெட் வீரராக ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். டி20 யுகத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பணமும், பொருளும் அதிகமாக கிடைக்கும் சூழலில், வைபவ் சூர்யவன்ஷியை டெஸ்ட் கிரிக்கெட் நோக்கி கொண்டு செல்ல தந்தை நினைப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சூர்யவன்ஷி

அவர் ஏற்கனவே யூத் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதிலும் அதிரடி ஆட்டத்தை விளையாடினாலும், கொஞ்சம் கொஞ்சமாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ப தனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றுவார் என்று நம்பப்படுகிறது. மேலும் டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய டி20 அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+