டைம் டிராவல் பண்ணி 2016க்கு போவோமா.. இதுதான்டா விண்டேஜ் விராட் கோலி.. 84வது சதம் விளாசிய கிங்!
ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 90 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 53வது சதம் இதுவாகும். அதேபோல் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து விராட் கோலி அடித்துள்ள 84வது சதமாகும். இதனால் விண்டேஜ் விராட் கோலியை பார்த்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், விராட் கோலி களம் புகுந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய விராட் கோலி, பவுண்டரிகளாகவும், 2 ரன்களாகவும் எடுத்து வந்தார். அவருக்கு ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த கம்பெனியை கொடுத்தார்.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 47 பந்துகளில் அரைசதம் அடிக்க, அதன்பின் சிறிது நேரம் நிதானமாக ஆடினார். அதன்பின் ருதுராஜ் கெய்க்வாட் 90 ரன்களை எட்டிய போது, அழுத்தத்தை தன்பக்கம் எடுத்து கொண்டு விராட் கோலி அதிரடியாக ரன்களை சேர்த்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் Running between the wickets அற்புதமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் இருவருமே கிளாசிக் ஒருநாள் கிரிக்கெட்டை ஆடினார்கள். தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 90 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதையடுத்து அதிரடியாக விளையாட முயன்ற விராட் கோலி 93 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 53வது சதம் இதுவாகும்.
அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் 84வது சதமாக இது அமைந்தது. அதுமட்டுமல்லாமல் விராட் கோலி மீண்டும் அற்புதமான ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் கடைசி 3 ஆட்டங்களில் 2 சதங்கள், ஒரு அரைசதத்தை விராட் கோலி விளாசி இருக்கிறார். இதனால் விராட் கோலி விண்டேஜ் ஃபார்முக்கு திரும்பிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் அடுத்தடுத்த போட்டிகளில் விராட் கோலி இப்படி சதமடிப்பது 10வது முறையாகும். 10 முறை தொடர்ந்து 2 சதங்களை வேறு எந்த வீரரும் அடித்ததில்லை. இதன் மூலமாக விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார். இதனால் 2027 உலகக்கோப்பை தொடர் வரை விராட் கோலி விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications