கோலி சதத்தை நெருங்கிய போது! வைட் கொடுக்கப்படாதது ஏன்? கெட்டில்பெர்க் முடிவிற்கு பின் உள்ள ஐசிசி விதி
சென்னை: நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் கோலி பேட்டிங் செய்த போது வங்கதேச பவுலர் நஸூம் வீசிய பந்திற்கு வைடு கொடுக்கப்படாதது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா வங்கதேசம் இடையிலான போட்டியில் நேற்று 97 ரன்கள் இருந்த போது நஸூம் வைட் பந்து வீசினார். அவரை சதம் அடிக்க விடக்கூடாது என்பதற்காக வைட் பந்து வீசினார். இது பெரிய அளவில் சர்ச்சையானது. விராட் கோலி கூட கோபமாக நாஸூமை பார்த்தார்.

விவாதம்: ஆனால் நடுவர் கெட்டில்பெர்க் இந்த பந்திற்கு வைட் கொடுக்கவில்லை. அப்படியே முறைத்து பார்த்துவிட்டு அவர் வைட் கொடுக்காமல் சென்றுவிட்டார். ஆனால் அந்த பந்தில் வைட் கொடுத்து இருந்தாலும் கோலி ரன் எடுத்து இருப்பார். அவர் எப்படி இருந்தாலும் கடைசியில் சதம் அடித்த போது சிக்ஸ் அடித்தார். அதனால் இங்கே வைட் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதனால் கோலிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது.
விதி என்ன?: 2022க்கு முன் இருந்த வைட் ரூல் படி ஒரு பேட்ஸ்மேன் லெக் சைடில் பந்து போனால் வைட். பவுலர் பந்து வீச வரும் போது பேட்ஸ்மேன் லெக் சைட் பக்கம் நின்றுவிட்டு அதன்பின் பவுலிங் போடும் நொடியில் ஆப் சைடு பக்கம் நகர்ந்து பந்தை வேண்டும் என்றே மிஸ் செய்தால் அதுவும் வைட்தான். 22.1, 22.2 இரண்டும் இதைத்தான் சொன்னது.
ஆனால் கடந்த வருடம் இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி பேட்ஸ்மேன் சாதாரணமாக ஒரே இடத்தில் நின்று.. நகராமல் இருக்கிறார்.. அவரின் லெக் சைடில் பந்து செல்கிறது என்றால் அது வைட் . அதே சமயம் அவர் லெக் பக்கம் நின்றுவிட்டு பந்து போடும் நொடியில் ஆப் பக்கம் சென்றால்.. அப்போது பந்து லெக் சைடில் சென்றால் அது வைடு கிடையாது. பேட்ஸ்மேன்கள் அதிகம் நகர்வதால் இந்த விதி கொண்டு வரப்பட்டது.
மாற்றப்பட்ட விதி: சரியாக சொல்ல வேண்டும் என்றால் பவுலர் ஓட தொடங்கிய போது பேட்ஸ்மேன் எந்த இடத்தில் இருக்கிறார்.. அதன்பின் ஆப் சைடு திசையில் அவர் நகர்கிறாரா .. வேண்டுமென்றே வைட் உருவாக்க பார்க்கிறாரா என்பது கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் நேற்று நஸூம் பவுலிங் செய்த போது கோலி முதலில் லெக் சைடு பக்கம் காலை வைத்துக்கொண்டு அதன்பின் பவுலிங் போட்டதும் காலை ஆப் சைடு பக்கம் நகர்த்துவார். அதன் படி பார்த்தல் புதிய விதி அடிப்படையில்.. அது வைடு என்று கணக்கில் கொள்ளப்படாது. வேண்டும் என்றே கோலி காலை எடுத்து வைடு உருவாக்க முயல்வதால் அது வைடு கிடையாது என்றே வரும்.
அதனால் நேற்று நடுவர் வைடு கொடுக்காமல் போனது சரிதான். அதே ஒருவேளை அவர் வைடு கொடுத்து இருந்தாலும் கடைசி பந்தில் கோலி சிக்ஸ் அடித்து வென்றதால் அவர் என்ன ஆகி இருந்தாலும் நேற்று செஞ்சுரி அடித்து இருப்பார் என்பது உறுதியாகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications