ரெடியா.. SDAT இந்தியா சர்வதேச இளைஞர் படகோட்டுதல் சாம்பியன்ஷிப்.. அட திரும்பி பார்க்க வைத்த சென்னை
சென்னை: ஜனவரி 4 முதல் 10 வரை 11வது சர்வதேச இளைஞர் படகோட்டுதல் போட்டி சென்னையில் நடக்கிறது. இந்தியாவின் மிக நீண்டகால சர்வதேச இளைஞர் படகோட்டுதல் நிகழ்வான 'இந்தியா சர்வதேச ரெகாட்டா', இம்முறை 'SDAT இந்தியா சர்வதேச இளைஞர் படகோட்டுதல் சாம்பியன்ஷிப்' என்ற புதிய பெயரிலும், புது வடிவத்திலும் நடைபெறும்.
இது சென்னையை நாட்டின் முன்னணி படகோட்டுதல் மையமாக்கி, தமிழக அரசின் விளையாட்டு முயற்சிகளுக்குப் பெருமை சேர்க்கிறது. தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் தீவிர முயற்சியால் இந்த போட்டிகள் சென்னையில் மீண்டும் நடக்கின்றன.

இந்திய படகோட்டுதல் சங்கம் (YAI)
இப்போட்டி, இந்திய படகோட்டுதல் சங்கம் (YAI) மற்றும் ஆசிய படகோட்டுதல் கூட்டமைப்பு (ASF) ஆகியவற்றின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு படகோட்டுதல் சங்கத்தால் நடத்தப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரே சர்வதேச இளைஞர் படகோட்டுதல் நிகழ்வு இது. இளம் படகோட்டிகளுக்கு இது ஒரு தனித்துவமான களம் ஆகும்.
எத்தனை பேர் பங்கேற்பார்கள்
2026 சீசனில் இந்தியா உட்பட 13 நாடுகள் மற்றும் ஒன்பது முன்னணி கிளப்களிலிருந்து படகோட்டிகள் பங்கேற்பர். உள்நாட்டில் சக்திவாய்ந்த சர்வதேசப் போட்டியாளர்களுடன் மோத இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. மேலும், 2025-26 ASAF கோப்பைத் தொடர் மூலம் ஆசியப் படகோட்டிகள் முக்கிய தரவரிசைப் புள்ளிகளைப் பெற இது உதவும்.
அனைத்துப் பந்தயங்களும் இந்தியா சர்வதேச ரெகாட்டா மற்றும் ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு யூடியூப் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். 2009இல் தொடங்கியதிலிருந்து, இந்த ரெகாட்டா இந்தியாவின் படகோட்டுதல் தரத்தை உயர்த்தி வந்தது. இங்குப் போட்டியிட்ட பலர் ஆசிய விளையாட்டுகள், உலக சாம்பியன்ஷிப்கள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
சென்னையின் அமைதியான குளிர்கால காலநிலை, சீரான காற்று, பாதுகாப்பான நீர்நிலைகள் ஆகியவை உலகளாவிய படகோட்டுதல் மையங்களுக்கு இணையான சூழ்நிலைகளை வழங்குகின்றன. தகுதிவாய்ந்த அதிகாரிகள் மற்றும் நடுவர்களின் மேற்பார்வையில், இப்போட்டி கடுமையான சர்வதேச பந்தய விதிமுறைகளைப் பின்பற்றுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இதன் முதன்மை ஸ்பான்சராகவும், L&T கன்ஸ்ட்ரக்ஷன் இணை ஸ்பான்சராகவும் உள்ளன. இந்திய கடலோர காவல்படை, சென்னை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை போன்ற பிற நிறுவனங்களும் இந்த நிகழ்வுக்கு ஆதரவளிக்கின்றன.
புதிய படகோட்டுதல் அகாடமிகள் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படுவதால், சென்னை இந்தியாவின் படகோட்டுதல் தலைநகராக வேகமாக மாறி வருகிறது. இது எதிர்காலத்தில் சர்வதேசப் போட்டிகளுக்கு வழிவகுத்து, இந்தியாவின் படகோட்டுதல் பெருமையை அதிகரிக்கும். இந்தியாவின் நீண்டகால சர்வதேச இளையோர் படகுப் போட்டி இதுவே.
ராமநாதபுரத்தில் புதிய வசதி
13 நாடுகளின் படகோட்டிகள், இந்தியாவின் ஒன்பது முன்னணி கிளப்களைச் சேர்ந்தவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். நாட்டின் தலைசிறந்த இளையோர், மூத்த படகோட்டிகளும் களம் காண்கின்றனர். ASAF கோப்பை 2025-26 தொடரின் ஒரு பகுதியாக, ஆசியப் படகோட்டிகள் தரவரிசைப் புள்ளிகளைப் பெற உதவுகிறது.
2009 இல் தொடங்கப்பட்ட இது, வளர்ந்துவரும் இந்தியப் படகோட்டிகளுக்குக் களமாக அமைந்துள்ளது. பலர் ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் போன்ற பன்னாட்டுப் போட்டிகளில் முன்னேறியுள்ளனர். சென்னையின் குளிர்காலக் காற்று, கடற்கரையோர உள்கட்டமைப்பு தேசியப் பயிற்சிக்கும் சர்வதேசப் போட்டிக்கும் விருப்பமான இடமாகியுள்ளது.
இப்போட்டி, மாநிலத்தின் புதிய உயர்திறன் படகுப் போட்டி உள்கட்டமைப்பு திட்டங்களுடன் இணைந்துள்ளது. மெரினா கடற்கரை அருகில் தமிழ்நாடு படகுப் போட்டி அகாடமி மற்றும் சிறப்பு மையம், இராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி ஆகியவற்றை உருவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன.












Click it and Unblock the Notifications