"உலகத்துக்கு ஒரே கடவுள்"... கொழும்பில் வலம் வரும் 'டூ வீலர்' வெடிகுண்டால் பெரும் பீதி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட மிகப் பெரும் தொடர் குண்டுவெடிப்புகளால் நிலைகுலைந்து போயுள்ளது இலங்கை. இந்நிலையில் உலகத்துக்கு ஒரே கடவுள் என்கிற வாசகத்துடன் வலம் வரும் டூ வீலர் வெடிகுண்டு குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தொடர் குன்டுவெடிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை போலீசார் அடுத்தடுத்து மனித வெடிகுண்டுகள் நடமாட்டம் குறித்து வெளியிட்டு வரும் தகவல்கள் கொழும்பு மக்களை பெரும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

Colombo fears over Two wheeler Human Bomber

கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகள் நிரம்பிய வேன் மற்றும் லாரிகள் நடமாடுவதாகவும் அந்த வாகனங்களின் விவரங்களையும் போலீசார் முதலில் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து 'உலகத்துக்கு ஒரே கடவுள்' என்ற வாசகத்துடன் டூ வீலரில் மனித வெடிகுண்டு நபர் நடமாடுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த டூ வீலர் பற்றிய புகைப்படங்களையும் கொழும்பு போலீசார் வெளியிட்டு அது குறித்து தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+