For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நெட்வொர்க், நிதி ஆதரவு தொடர்கிறது: அமெரிக்கா

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச நெட்வொர் மற்றும் அந்த இயக்கத்தின் நிதி ஆதரவு தொடர்வதாக அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் 2014 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

Financial Support for LTTE Intact, Says US Terror Report

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையில் எந்த தீவிரவாத தாக்குதலும் நடக்கவில்லை. இலங்கை அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக 13 விடுதலைப்புலிகள் 2014-ல் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சிலர் இந்தியாவில் உள்ள 'அமெரிக்கா, இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டவர்கள்' என்று கூறப்பட்டு உள்ளது.

2014-ம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக 16 அமைப்புகள் செயல்படுகின்றன. அந்த அமைப்பின் திட்டங்களுக்காக 422 பேர் நிதி உதவி செய்து இருப்பதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது.

2009-ம் ஆண்டு நடந்த உச்சகட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிப்பட்டு விட்டாலும் கூட சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பு உள்ளது; அந்த இயக்கத்துக்கு நிதி உதவி அளிப்பதும் இன்னும் நீடிக்கிறது.

இவ்வாறு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

English summary
The Liberation Tigers of Tamil Eelam's (LTTE) international network and financial support are still intact despite its military defeat at the hands of Sri Lankan government troops in 2009, a US government report has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X