மதுரை: கட்டுமான இடத்தில் ஏற்பட்ட மண் சரிவால் 2 பெண் தொழிலாளர்கள் மரணம்!
மதுரை மாவட்டம் சிலைமான் அருகே திருமண மண்டபம் கட்டும் பணியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி இரண்டு பெண் கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர், இந்த நிகழ்வு அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள் மதிய உணவுக்குப் பிறகு பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், ஆழமான குழியின் விளிம்பில் நடந்து செல்லும்போது, மண் தளர்ந்து சரிந்து விழுந்ததால் குழிக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மண்ணுக்குள் 2 பெண் தொழிலாளர்களும் புதைந்தனர். இந்த விபத்தில் சிக்கிய இருவரும் உயிரிழந்தனர்.

மணலூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி அவருக்கு 46 வயது, மற்றொருவர் புளியங்குளத்தைச் சேர்ந்த தமிழரசி அவருக்கு 60 வயது ஆகிறது. மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆழமான குழியில் இரும்பு கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
தகவல் அறிந்ததும் சிலைமான் போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். முதலில் தனலட்சுமியின் உடலை மீட்டனர். பின்னர் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் கயிறுகள் மற்றும் தேவையான கருவிகளைப் பயன்படுத்தி பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தமிழரசியின் உடலையும் மீட்டெடுத்தனர்.
உயிரிழந்த இரண்டு பெண்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் தங்கராஜு மீது சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டுமானப் பணியில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா, தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்ளையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications