விமான நிலையங்களை இந்தியாவிடம் கொடுப்பதா? இலங்கையில் போராட்டம்!
இலங்கை விமான நிலைய பராமரிப்பு பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம் நடைபெற்றது.
கொழும்பு: இலங்கையில் உள்ள முக்கியமான பகுதிகளில் ஒன்றான அம்பாந்தோட்டை என்ற இடத்தில் இருக்கும் மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை பராமரிக்கவும், நிர்வகிக்கவும் இந்தியாவை நாடியுள்ளது அந்நாட்டு அரசு. பராமரிப்பு பணிகளை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்க்கட்சிகளும், மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் போராட்டம் நடை பெற்றது.
இலங்கையில் உள்ள முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் மாத்தளை விமான நிலையமும் ஒன்றாகும். தினமும் நிறைய பயணிகள் வந்து போகும் இந்த விமான நிலையத்தை பராமரிக்கும் பணியை அந்நாட்டு அரசு இந்திய நிறுவங்களிடம் அளிக்கலாம் என முடிவு எடுத்துள்ளது. மேலும் இந்த விமான நிலையத்தை தொடர்ந்து மேலும் சில விமான நிலையங்களையும் பராமரிக்க இந்தியாவையே நாடலாம் எனவும் முடிவு எடுத்துள்ளது.

இந்த விஷயம் அந்நாட்டில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் மக்களும் , எதிர்க்கட்ச்சிகளும் இணைந்து இந்தத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர். அதேபோல் இலங்கைத் தூதரகம் அமைந்துள்ள அம்பாந்தோட்டையிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜ பக்சே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டம் வலுவாகவே, போலீசார் தண்ணீரை பீய்ச்சு அடிக்கத் தொடங்கினர். இதையடுத்து போலீசுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.
இதுவரை 26 பேர் இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை சர்வதேச விமான நிலையமானது ராஜ பக்சே ஆட்சியில் சீனாவின் பொருளாதார உதவியுடன் கட்டப்பட்டது. சீனா உதவியுடன் கட்டப்பட்ட விமான நிலையத்தை இந்தியா பராமரிப்பதா என அங்கு வலுவான எதிர்ப்பு எழுந்துள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications