இந்தியா- இலங்கை இடையே அணுசக்தி ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை முடிந்தது
கொழும்பு: இந்தியா- இலங்கை இடையே நடைபெற்ற அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான 2ம் கட்டப் பேச்சுவார்த்தை முடிவடைந்ததுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில், இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சக இணைச் செயலர் அமந்தீப் சிங் கில் தலைமையிலான குழுவினர் மற்றும் இந்திய அணுசக்தித் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இலங்கை சார்பில் அந்நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறை அமைச்சக செயலர் தாரா விஜயதிலகே, அணுசக்தித்துறை அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.
இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு சக்தி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நட்புரீதியாகவும், மனப்பூர்வமாகவும் சுமூகமான முறையிலும் நடைபெற்றது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications