320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்!
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது.
Recommended Video
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது. ஐஎஸ் இயக்கத்தின் அமாக் இணைய பக்கத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது .
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் அன்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இதில் 450 பேர் காயம் அடைந்தனர்.

யாரும் இல்லை
ஆனால் இலங்கையில் இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்தும் அதற்கு யாரும் பொறுப்பேற்காமல் இருந்தனர். கிட்டத்தட்ட தாக்குதல் நடந்து 48 மணி நேரம் தாண்டியும் இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காமல் இருந்தனர். இதனால் பெரிய குழப்பம் நீடித்து வந்தது.

என்ன சொன்னார்கள்
அதன்பின் இலங்கையில் இது தொடர்பாக நிறைய தகவல்கள் வெளியானது. நியூசிலாந்து கிறிஸ்ட் சர்ச் பகுதியில் மசூதியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடிதான் இந்த தாக்குதல் என்றும் இலங்கை அமைச்சர்கள் தெரிவித்தார்கள். இதற்கு பின் வெளிநாட்டு சதி இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்கள்.

பொறுப்பேற்பு
இந்த நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது. ஐஎஸ் அமைப்பின் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவண்ட் குழு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
|
எப்படி
ஐஎஸ் அமைப்பின் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவண்ட் இயக்கத்தின் அமாக் இணைய பக்கத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக இதுவழியாகத்தான் ஐஎஸ் அமைப்பு தீவிரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும். இந்த செய்தியால் தற்போது இலங்கை தாக்குதலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications