For Daily Alerts
Just In
ஜே.வி.பி.யின் மூத்த தலைவர் சோமவன்ச அமரசிங்க காலமானார்
கொழும்பு: ஜனதா விமுக்தி பெரமுனா(ஜே.வி.பி) எனப்படும் சிங்கள இனவாத கட்சியின் மூத்த தலைவர் சோமவன்ச அமரசிங்க காலமானார்.
இலங்கை அரசுக்கு எதிராக 1971-ம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டது சிங்களர்களைக் கொண்ட ஜே.வி.பி. அப்போது இந்த இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர்களில் உயிர் தப்பியவர் சோமவன்ச அமரசிங்கே மட்டும்.
பின்னர் ஜே.வி.பி. அரசியல் கட்சியாக மாறியபோது 24 ஆண்டுகாலம் அக்கட்சியின் தலைவராக இருந்தார் சோமவன்ச. 2014-ம் ஆண்டு ஜேவிபி தலைவர் பதவியில் இருந்து விலகி புதிய கட்சியையும் தொடங்கினார்.
அண்மைக்காலமாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை தீவிரமாக ஆதரித்து வந்தார். உடல்நலக் குறைவால் சோமவன்ச அமரசிங்கே நேற்று காலமானார்.
Comments
English summary
Former Leader of the Janatha Vimukthi Peremuna , Somawansha Amarasinghe has passed away.
Story first published: Thursday, June 16, 2016, 10:07 [IST]