For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர்… இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரங்கல்

மறைந்த ஜெயலலிதாவிற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: மறைந்த ஜெயலலிதா, இந்திய தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்ய உள்ள மறைந்த ஜெயலலிதாவிற்கு இலங்கை முன்னாள் ஜனாதிபதியும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்பியுமான மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

Mahinda Rajapaksa condolence to Jayalalithaa’s death

அதில், முதலமைச்சர் ஜெயலலிதா, இந்திய தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர். அவரது மறைவினால் துயரப்பட்டுள்ள அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன் என்று மகிந்த ராஜ பக்ச கூறியுள்ளார்.

நேற்று இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் மறைந்தார். அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர், எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

English summary
Former President of Sri Lank Mahinda Rajapaksa twitted his condolence to Jayalalithaa’s death today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X