யாழில் இலங்கை ராணுவம் ஆக்கிரமித்த 430 ஏக்கர் நிலம் விடுவிப்பு- தமிழரிடம் ஒப்படைப்பு!!
யாழ்ப்பாணம்: இலங்கை ராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 430 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டு தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ராணுவம் ஆக்கிரமித்திருந்த வளலாய் பிரதேசத்தின் 233 ஏக்கர்; வசாவிளான் கிழக்கு பகுதியில் 197 ஏக்கர் நிலத்தை தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்க இலங்கை அரசு முடிவு செய்தது.

இதற்காக யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நிலத்தை ஒப்படைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேன பேசியதாவது:
எனது ஆட்சியில் இனம், மத அடிப்படையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
நாட்டில் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம் இன மக்கள் இடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் நிலப்பிரச்னைகள் தீர்க்கப்படும். வடக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் சிறந்த வாழ்க்கைச் சூழலை வழங்கும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், போரில் அழிந்த வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டமைக்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு சிறிசேன பேசினார்.
ரணில்- விக்னேஸ்வரன் மோதல்
இந்நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டதாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ரணில் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications