ராஜபக்சே மகன்களிடம் சிக்கி சீரழிந்த பெண்கள்... சிங்கள அமைப்பு பரபரப்பு புகார்!
கொழும்பு: ராஜபக்சேவின் மகன்களான நமல், யோஷிதா மற்றும் ரோஹிதா ஆகியோர் பல பெண்களை கடத்தியும், கட்டாயப்படுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உருமயா என்ற சிங்கள அமைப்பு கூறியுள்ளது.
இந்த மூவரும் சேர்ந்து பல பெண்களைப் பலாத்காரம் செய்த செயல் குறித்து தங்களிடம் ஏராளமான தகவல்கள் இருப்பதாகவும், நமல் ராஜப்சேவின் நீலப்படையினர் பெண்களைக் கடத்திச் சென்று இந்த மூன்று காமுகர்களும் சீரழித்துள்ளதாகவும் இந்த அமைப்பின் தலைவரான நிஷாந்தா சிறிவர்ணசிங்கே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊழல் - பாலியல் பலாத்காரங்கள்
ராஜபக்சேவின் மூன்று மகன்களும் பல்வேறு விதமான ஊழல்களிலும் பாலியல் பலாத்காரச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவற்றை நாங்கள் அம்பலப்படுத்துவோம்.

விரிவான தகவல்கள்
இதுதொடர்பாக எங்களிடம் விரிவான தகவல்கள் உள்ளன. அவர்கள் செய்த அத்தனை அட்டூழியங்களுக்காகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இளம் பெண்களை சீரழித்தவர்கள்
இந்த மூன்று பேரும் ஏராளமான இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். செக்ஸ் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நமல் செய்த அட்டகாசம்
நீலப்படை என்ற பெயரில் நமல் செய்த அட்டகாசம்தான் மிகப் பெரியது. இது நாட்டின் மாற்று ராணுவம் போல செயல்பட்டு வந்தது. நமல் தலைமையில் இயங்கி இந்த நீலப்படையினர் கடத்திய பெண்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

எண்ணிலடங்காத பெண்கள்
இந்த மூவராலும் பாதிக்கப்பட்ட பெண்கள் எக்கச்சக்கமாக உள்ளனர். இத்தனை பேர்தான் என்று கூற முடியாத அளவுக்கு சரமாரியாக இவர்கள் பல பெண்களை சீரழித்துள்ளனர்.

பதவியும் பணமும் கொடுத்து
தங்களால் சீரழிக்கப்பட்ட பல பெண்களுக்கு ஏராளமான பணத்தையும், பதவிகளையும் கொடுத்து இவர்கள் சரிக்கட்டியுள்ளனர். இந்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம்.

யாரையும் விடக் கூடாது
இந்த மூன்று பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். யாரையும் தப்ப விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

நடிகைகளுடன் தொடர்பு
ஏற்கனவே இந்த மூன்று பேருக்கும் பல நடிகைகளுடன் தொடர்பு உள்ளதாக ஒரு தகவல் உண்டு. அதிலும் நமல் ராஜபக்சேவுக்கும் இந்திய நடிகைகள் பலருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள், புகைப்பட ஆதாரங்களும் வெளியாகியுள்ளன என்பது நினைவிருக்கலாம்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications