For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொழும்பில் மகிந்த ராஜபக்சேவுடன் சல்மான் குர்ஷித் சந்திப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று கொழும்பில் சந்தித்துப் பேசினார்.

இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள சம்லான் குர்ஷித் நேற்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்தித்துப் பேசினார்.

Salman Khurshid and Rajapakse

இதைத் தொடர்ந்து இன்று காலை கொழும்பு அலரி மாளிகையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு சென்றார் சல்மான் குர்ஷித். அங்கு இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை அவர் பார்வையிட்டார்.

English summary
External Affairs Salman Khurshid Salman Khurshid met President Mahinda Rajapaksa in Colombo on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X