இலங்கையை சீரழித்த மகிந்த ராஜபக்சே.. அதிரவைக்க வருகிறது சந்திரிகாவின் சுயசரிதை!
கொழும்பு: இலங்கையை சீரழித்த மகிந்த ராஜபக்சேவின் நடவடிக்கைகள் குறித்து தமது சுயசரிதையில் விரிவாக எழுத இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வரும் 17-ந் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குருநாகலில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அதிபர் சந்திரிகா பேசியதாவது"

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் பிறந்தேன். சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இறப்பேன். அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதியாக வீட்டில் இருந்தேன்.
மகிந்த ராஜபக்சே தலைமையிலான துஷ்ட சக்திகளினால், அழிவுக்கு உள்ளாகியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றுவதற்காகவே மீண்டும் அரசியல் மேடையில் ஏறநேர்ந்தது.
புலிகளுடனான போரை வெற்றி கொண்டவர் என்பதற்காக மட்டும், மகிந்த ராஜபக்சேவுக்கு வாக்களிப்பதானால் அவருக்கு வாக்களிக்கலாம். ஆனால் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் போரில் பங்களித்தவர்.
போரை வெற்றி கொண்ட உரிமை தமக்கே இருப்பதாக மகிந்த ராஜபக்சே உரிமை கொண்டாட முடியாது. அந்த உரிமை எனக்கு, ஐக்கிய தேசிய அரசாங்கத்துக்கு, இராணுவத்துக்கும் உள்ளது. நான் அதிபராக இருந்த போது தான், யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றினேன். ஐதேக ஆட்சிக்காலத்தில் தான் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டது.
ராஜபக்சே அதிபரான பின்னர், வடக்கு. கிழக்கின் எஞ்சிய பகுதிகள் விடுவிக்கப்பட்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். இறுதிச் சமரில் மகிந்த ராஜபக்சே அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு சரத் பொன்சேகா பெரும் பங்கு வகித்திருந்தார்.
ஆனால் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய சரத் பொன்சேகா சிறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். எனக்குப் பின்னர் அதிபரான மகிந்த ராஜபக்சே நாட்டை எவ்வாறு மோசமாக நடத்தினார் என்பதை, எனது சுயசரித நூலில் வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு சந்திரிகா கூறியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications