இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!- 20 சடலங்கள் மீட்பு!
கொழும்பு: இலங்கையில் மலையகப் பகுதியான பதுளை மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட மிகப் பயங்கர நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்ட இந்திய வம்சாளித் தமிழர்கள் புதையுண்டனர். இதுவரையிலான மீட்புப் பணியில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இலங்கையில் பருவமழை தீவிரமானதால் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலையகப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலையகமான ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த, மீரியபெத்தையில் இன்று காலை மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் மொத்தம் 70 வீடுகள் அப்படியே மண்ணில் புதையுண்டன. இந்த 70 வீடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைந்தனர். இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளித் தமிழர்கள். அனைவரையும் மீட்பதற்கான பணிகள் காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொஸ்லந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) October 29, 2014 ஆனால் தற்போது வரை 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தொடர் மழை பெய்து வந்ததால் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் பல குடும்பங்கள் வெளியேறிவிட்டன. எஞ்சியிருந்தோரே நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.
மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் இலங்கை ராணுவமும் விமானப்படையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் முகாமிட்டிருந்த இலங்கை ராணுவத்தின் கமாண்டோ படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பதுளைக்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரையில் கொஸ்லந்த தேடுதல், மீட்புப் பணிகளில் இராணுவமும், இராணுவத்தின் கனரக இயந்திரத் தொகுதிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) October 29, 2014 200 ஏக்கர் பரப்பளவில் நிலச்சரிவு?
மொத்தம் 200 ஏக்கர் பரப்பளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் மீறியபெந்த என்ற தோட்டப் பகுதியையே காணவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இப்பகுதியில் தமிழர்கள் அமைத்திருந்த கோயில் ஒன்றும் நிலச்சரிவில் புதைந்து போய்விட்டது.
இந்த பகுதியில் இயங்கி வந்த 10 கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நிலச்சரிவு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை இந்திய வம்சாவளித் தமிழ் அமைச்சரான ஆறுமுகம் தொண்டமான் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகிறார்.
உயிர் தப்பியவர்கள்
இந்த பயங்கர நிலச்சரிவில் உயிர் தப்பியவர்களில் ஒருவரான மகேந்திரன் என்பவர், இன்று காலை 7 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நாங்கள் தப்பியோட முயற்சித்தும் பலனில்லை.
எப்படியாவது ஓடி தப்பியோடிவிடலாம் என்று நினைத்தோம் முடியாமல் போய்விட்டது. சுமார் 500 பேர் இதில் சிக்கியிருக்கலாம். எனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை என்றார்.
இதேபோல் ராதா என்ற பெண் கூறுகையில், காலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த ஒரு சத்தத்தை மட்டுமே எங்களால் கேட்க முடிந்தது. இடுப்பு கீழே முழுவதும் மண் மூடிவிட்டது. சிலர் மண்ணை வெட்டி அகற்றி என்னை உயிரோடு காப்பாற்றினர் என்றார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications