For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிச்சயம் ஜெயிச்சுருவேன்... ராஜபக்சே நம்பிக்கை!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கைத் அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெறுவேன் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றுது. தற்போது அந்நாட்டின் அதிபராக உள்ள ராஜபக்சே, தனது தொகுதியான அம்பந்தோட்டாவில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

Sri Lanka polls: Confident of winning, Rajapaksa says after casting ballot

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராஜபக்சே, ‘நாங்கள் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். அது மிகத்தெளிவாக தெரிகிறது. நாளை முதல் எங்கள் கொள்கைகளை செயல்படுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவோம்' எனத் தெரிவித்தார்.

ராஜபக்சேவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறீசேனா போட்டியிடுகிறார்கள்.

இலங்கையின் பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியான முறையிலேயே நடந்து வந்தாலும், சில இடங்களில் தேர்தல் வன்முறைகள் அரங்கேறி உள்ளன. முன்னதாக, சிறீசேனாவின் தேர்தல் பிரச்சாரத்திலும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இதைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கெர்ரி, ‘தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும்' என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
Sri Lankan President Mahinda Rajapaksa on Thursday said he was confident of getting re-elected after casting ballot here in the presidential poll. Rajapaksa brought ahead the polls by two years and was challenged by his former party colleague Maithripala Sirisena.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X